திருநறுங்கொண்டைத்‌ திருத்தல வரலாறு மு. சண்முகம்பிள்ளை, தமிழ்‌ விரிவுரையாளர்‌, திருக்குறள்‌ ஆராய்ச்சிப்‌ பகுதி, சென்னைப்‌ பல்கலைக்‌ கழகம்‌. வெளியிடுவோர்‌ £ தமிழ்நாடு ஜைன சங்கம்‌ சென்னை முதற்பதிப்பு : ஜூலை, 1973. டூ தமிழ்நாடு ஜைன சங்கம்‌, சென்னை. கிடைக்குமிடம்‌ : செயலாளர்‌, 11 பீட்டர்ஸ்‌ ரோடு காலனி, சென்னை- 14 விலை ரூ. 1 அச்சிட்டோர்‌ : ஸ்ரீமதி பிரிண்டர்ஸ்‌, சென்னை-2. வாழிய நல்லறம்‌ பதிப்புரை திருநறுங்‌ கொண்டை மிக்க சிறப்புடைய தென்னாட்டு ஜைன திருத்தலம்‌. இங்குக்‌ ேக யில்‌ கொண்டு எழுந்தருளியிருக்கும்‌ பெருமான்‌ பார்சுவநாதர்‌; இருபத்து மூன்றாம்‌ தீர்த்தங்கரர்‌, இவரையே அப்பாண்டைநாதர்‌ என அழைக்கின்றனர்‌. ஒரு காலத்தில்‌ இத்தலம்‌ ஜைன சமய அறவோரின்‌ வாழ்விடமாய்ப்‌ பல்‌ கலை நிலையமாய்த்‌ திகழ்ந்தது. அ௮ப்பாண்டை நாதரைக்‌ குறித்துப்‌ புலவர்‌ பெருமக்கள்‌ பாடிய துதிப்பாடல்களும்‌ தனி நூல்களும்‌ சிந்தைக்கினிய பத்திப்‌ பனுவல்‌ களாக விளங்குகின்றன. இவற்றுள்‌ அனந்தவிசயர்‌ அருளிச்செய்த “அப்பாண்டைநாதர்‌ உலாவும்‌ ஒன்ருகும்‌. இப்‌ பண்டைய நூலே இவ்‌ வரலாற்று நூல்‌ வெளிவருவதற்குக்‌ காரணமாக இருந்தது. ஏட்டுச்‌ சுவடியிலுள்ள இவ்வுலா நூலை அச்சிட்டு வெளியீடுமாறு சென்னைப்‌ - எல்கலைக்கழகத்‌ தமிழ்த்‌ துறையினரிடம்‌ தரப்பட்டது. இதனை, சென்னைப்‌ பல்கலைக்கழகத்‌ தமிழ்த்துறை வெளியீடாகிய “தமிழாய்வீல்‌” வெளியிட முன்வந்த தமிழ்த்துறைத்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ டாக்டர்‌ ந, சஞ்சீவி அவர்களுக்கு முதற்கண்‌ நன்றிபாராட்டக்‌ கடமைப்‌ “டுள்ளோம்‌. இதனை ஏட்டுச்‌ சுவடியிலிருந்து முதன்‌ முறையாகத்‌ தமிழாய்வு * இதழில்‌ பதிப்பித்துதவியவர்‌ பூலவர்‌ திரு. மு. சண்முகம்‌ பிள்ளையாவார்கள்‌. திருநறுங்கொண்டையின்‌ சிறப்புகளை உணரவும்‌. அத்தலத்தைக்‌ காணவேண்டும்‌ என்னும்‌ ஆர்வத்தை அன்பர்களுக்கு ஊட்டவும்‌ இந்‌ நூல்‌ தூண்டுதலாக அமைதந்ீத்து. தமிழ்நாடு ஜைன சங்கச்‌ சார்பில்‌, “அப்பாண்டைதாதர்‌ உலா?வை அச்சிட்டு வெளியிட்ட பல்கலைக்‌ கழகத்‌ தமிழ்த்துறைப்‌ பேராசிரியப்‌ பெருமக்களை திருநறுங்கொண்டை ஜினாலயத்திற்குச்‌ சுற்றுலாவாக அழைத்துச்‌ சென்று, அங்குப்‌ பாராட்டு விழாவும்‌ நடத்திச்‌ சிறப்பித்தோம்‌. அதன்‌ பின்னர்‌, புலவரீ திறு. மு. சண்முகம்‌ பிள்ளை அவர்கள்‌ திருநறுங்கொண்டை வரலாற்றினை இலக்கியம்‌, கல்வெட்டுச்‌ சான்றுககா ஆராய்ந்து, அவற்றை ஆதாரமாசத்‌ கொண்டு இந்‌ நூலை உருவாக்கினார்கள்‌. இவ்‌ வரலாற்று நூலை நம்‌ சங்கமாத வெளியீடாகிய நல்லறத்தில்‌ வெளியிடுமாறு சங்கத்தின்‌ பார்வைக்கு அனுப்பி வைத்தார்கள்‌. தமிழ்நாடு ஜைன சங்கத்தினர்‌ இவ்வரிய நூலைப்‌ படித்து இன்புற்றுத்‌ தனி நூலாக வெளியிட விழைந்தனர்‌. இந்‌ நூலை வெளியிடப்‌ பொருளுதவி வேண்டுமல்லவா? அதற்காக வேதாரணியம்‌ திரு. &. 7, அனந்தராஜய்யன்‌ முதலியார்‌ அவர்‌ களையும்‌, பொறியாளர்‌ திரு. &. சின்னதுரை, 8.1. அவர்களையும்‌ அணுகினோம்‌. அவ்விரு பெரியார்களும்‌, திருதறுங்கொண்டைக்‌ கருகில்‌ செல்லும்‌ பாதையில்‌ இருக்கும்‌ வாய்க்காலின்‌ மீ பாலம்‌ கட்ட முயன்று, முற்றுப்‌ பெறச்‌ செய்தவர்கள்‌. எனவே அவர்களிருவரும்‌ எங்கள்‌ வேண்டுகோகா ஆர்வமோடு ஏற்றுக்‌ கொண்டனர்‌. அவர்கள்‌ இருவர்களின்‌ ஆதரவினாலேயே, தமிழ்‌ நாடு ஜைன சங்கத்தின்‌ சார்பில்‌, இவ்‌ வரலாற்று நூல்‌ வெளிவரும்‌ வாய்ப்பு ஏற்பட்டது. இந்‌ நூலினை வெளியிடும்‌ வாய்ப்புக்‌ கிடைக்கப்‌ பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகின்றோம்‌. ஆகவே, இவ்விரு பெரி யார்களுக்கும்‌, இவ்‌ வரலாற்று நூலை எழுதிச்‌ சிறப்பித்த புலவர்‌ திரு. மு. சண்முகம்‌ பிள்ள அவர்களுக்கும்‌ எங்கள்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ நன்றி கலந்த வணக்கத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. இவ்வரிய நூலினை அழகுற அச்சிட்டுத்‌ தந்த ஸ்ரீமதி அச்சகத்‌ தினருக்கும்‌ எங்கள்‌ நன்றி, ஜைனப்‌ பெருமக்களும்‌ வரலாற்று அன்பர்களும்‌ பிறரும்‌ இந்‌ நூலைப்‌ பெற்றுப்‌ பயன்‌ பெறுவார்களாக. சென்னை தமிழ்நாடு ஜைன சங்கம்‌ 11-7-1973 சென்னை அருகன்‌ திருவடி வாழ்த்து திருமா மகளுறை கின்றசெநீ தாமரை யொன்றதன்‌ மேல்‌ வருமா மலர்க ளிரண்டுடை யான்மதி போல்நிழற்றுங்‌ குருமா மணிக்குடை மூன்றுடை யான்குண நான்கமைந்த பெருமா னறுங்கொண்டை பயென்னவல்‌ லார்க்கில்லை பேரிடரே, பூவும்‌ புனலும்‌ பொழிந்தொரு மூன்றுபுவ னத்தெல்லாத்‌ தேவும்‌ புகழ்ந்தமை யாத்திருத்‌ தீபையிற்‌ செய்தவத்தோர்‌ மேவுந்‌ திருப்பா ழியிற்றிரு மேற்றிசை வீரனையென்‌ நாவும்‌ பரவுமென்‌ ரூலென்‌ சொலாரிந்த நாட்டவரே. வரந்தருந்‌ தீபையுண்‌ மேற்றிசை யானை மதியுடையோர்‌ நிரந்தர மாக நினைக்கிற்‌ குறையே நினைந்தொருகால்‌ கரந்தரு சென்னிய ரானபின்‌ யாவருங்‌ கைதொழுவார்‌ புரந்தர ராகுவர்‌ பூவும்‌ புனலும்‌ பொழிந்து நின்றே, -திருமேற்றிசையந்தாதி முடி ஒர புட இட கல 84௮ மூவா மூதலா வுலகம்மொரு மூன்று மேத்தத்‌ தாவாத வின்பந்‌ தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்றகுணத்‌ தொண்ணிதிச்‌ செல்வ னென்ப தேவாதி தேவ னவன்‌ சேவடி சேர்‌ துமன்‌ றே. சீவக சிந்தாமணி திருநறுங்கொண்டைத்‌ திருத்தல வரலாறு தென்னார்க்காடு மாவட்டத்தில்‌ சைனர்கள்‌ சிறப்பாகக்‌ கொண்டாடும்‌ திருத்தலம்‌ திருநறுங்கொண்டை. இது சைனர்‌ களின்‌ திவ்விய யாத்திரைத்‌ தலங்களுள்‌ ஓன்று. இது திருக்‌ கோயிலூர்‌ (திருக்கோவலூர்‌) வட்டத்தைச்‌ சார்ந்த ஊராகும்‌; திருக்கோயிலூரிலிருந்து பன்னிரண்டு மைல்‌ தென்கிழக்காக உள்ளது. உளுந்தூர்ப்பேட்டையில்‌ திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து திருவெண்ணெய்நல்லூர்‌ செல்லும்‌ கிகாச்‌ சாலை வழியாக ஏறக்குறைய ஏழு மைல்‌ தூரத்தில்‌ ₹ பிள்ளையார்‌ குப்பம்‌ ? என்னும்‌ சிற்றூர்‌ உள்ளது. அங்கிருந்து வடகிழக்காகச்‌ சுமார்‌ மூன்று மைல்‌ சென்றால்‌ * திருநறுங்குன்றம்‌ ? என வழங்கும்‌ திருநறுங்கொண்டைத்‌ திருமலையை அடையலாம்‌. மலையின்‌ தென்கீழ்பால்‌ இப்பொழுது மக்கள்‌ வாழும்‌ தெருக்கள்‌ அமைந்துள்ளன. 1961ஆம்‌ ஆண்டு மக்கள்‌ தொகைக்‌ கணக்கின்படி இங்குள்ளார்‌ தொகை 489: இப்‌ பொழுதும்‌ ஊரின்‌ நிலமையைப்‌ பார்க்கும்பொழுது, இங்கு ஐந்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட மக்கள்‌ இருக்கலாம்‌ என்று தோன்று கிறது. ௨௯. பிள்ளை யார்குப்பம்‌ வரையில்‌ கருங்கல்‌ சரளையிட்ட கப்பிச்‌ சாலையாகவும்‌, அதற்கு மேற்பட்ட பகுதி மண்‌ சாலையாகவும்‌ உள்ளது. உளுந்தூர்பேட்டைக்கு எல்லாத்‌ திசைகளிலிருந்தும்‌ ரயில்‌ வழியாகவும்‌ பேருந்து வழியாகவும்‌ சென்று சேரலாம்‌. அங்கிருந்து மலைக்குச்‌ செல்லும்‌ தொலைவாகிய ஏறக்குறை பத்து மைல்‌ தூரத்திலும்‌ பொதுப்‌ போக்குவரத்து வசதிகள்‌ இல்லை. தனி ஏற்பாடுசெய்து வண்டிகளிலோ தனிப்‌ பேருந்து களிலோ செல்லலாம்‌. தனி உந்துவண்டியுடையார்‌ நினைத்த மாத்திரத்தில்‌ எளிதில்‌ செல்லலாம்‌. உளுந்தூர்ப்பேட்டையை விட்டதுமேமே திருநறுங்‌ கொண்டைக்கு வந்து விட்டது போன்ற உணர்ச்சி மேலிடு கிறது. கொண்டை மலையை நோக்கிச்‌ செல்லும்‌ கிளைச்சாலை நன்செய்‌ புன்செய்‌ நிலங்களின்‌ வழியே செல்லுகிறது. இடை யிடையே சில சிறு பாடிகள்‌ தென்படுகின்றன. இவற்றில்‌ கல்‌ கட்டடங்களைக்‌ காண்பது மிக அருமையாயிருக்கிறது. அவ்‌ வாறு ஏதேனும்‌ குறுக்கிட்டால்‌, அது கோயிலாகவோ அல்லது அஞ்சல்‌ நிலையமாகவோ இருக்கும்‌. விழல்‌ வேய்ந்த கூரை வீடுகளுக்கு மத்தியில்‌ ஏகதேசமாக ஒன்றிரண்டாய்க்‌ காணப்படும்‌ காரைவீடுகள்‌ அங்கு வாழ்வாரின்‌ தில்மையை நன்கு உணர்த்தும்‌. பொதுவாகப்‌ பார்க்கும்போது, இன்னும்‌ அங்குள்ள சிற்றூர்களை நவநாகரிகம்‌ முற்றும்‌ ஆட்கொள்ள வில்லை என்னலாம்‌. வழிநெடுகிலும்‌ அங்கங்கே சிறிதும்‌ பெரிதுமான ஏரிகள்‌ சிலவும்‌ கண்ணுக்கினிய காட்சிகளை நல்குகின்றன. இவற்றில்‌ பெருகும்‌ நீரின்‌ துணைகொண்டு நன்செய்ப்‌ பயிர்கள்‌ நன்கு நடைபெறுகின்றன. முன்பனிப்‌ பருவத்திலே எங்குப்‌ பார்த்‌ தாலும்‌ பச்சைப்பசேல்‌ எனக்‌ காணும்‌ வயல்‌ வெளிகளே. பூமீதேவி, இப்‌ பகுதியிலே பச்சைப்படாம்‌ போர்த்து விளங்குவதுபோலக்‌ காட்சி தருகிறாள்‌. திருநறுங்‌ கொண்டையில்‌ திருமலையை அடுத்துத்‌ தெற்கிலும்‌ வடக்கிலும்‌ பெரிய ஏரி இருக்கிறது. இப்பொழுது 7 ஏரியின்‌ தென்மேல்‌ பகுதியில்தான்‌ நீர்‌ மிகவும்‌ நிரம்புகிறது. இது வரலாற்றில்‌ சிறப்பிடம்‌ பெற்ற ஏரியாகும்‌. இதனை ஆக்கி உதவியவர்‌ இராசராச சோழனின்‌ சகோதரியாகிய குந்தவைப்‌ பிராட்டியாராவர்‌. அதனால்‌ இந்த ஏரியைக்‌ “குந்தவைப்‌ டபரரரி? என முன்பு வழங்கினர்‌. இத்‌ திருக்கோயிலில்‌ காணப்‌ படும்‌ சாசனங்கள்‌ இந்த ஏரியைக்‌ குந்தவைப்‌ பேரேரி” . என்றும்‌, * இவ்வூர்ப்‌ பேரேரி” என்றும்‌ குறிப்பிடுகின்றன. இப்பொழுதுள்ளார்‌ இதனைப்‌ * பெரிய ஏரி? எனச்‌ சொல்லு கின்றனர்‌. இதற்குச்‌ சற்றுத்‌ தென்மேற்கே மற்றொரு பெரிய ஏரியும்‌ உள்ளது. இதன்‌ குறுக்கே இவ்வூர்க்குச்‌ செல்லும்‌ மண்சாலை சென்று, பெரிய ஏரியின்‌ தென்கரையைச்‌ சார ஊரினுள்‌ செல்லுகிறது. பெரிய ஏரியிலிருந்து சாலையின்‌ குறுக்காக மதகுத்‌ தூம்புவாயினின்று நீர்‌ பாய்ந்து வயல்களுக்குச்‌ செல்லு கிறது. இந்த இடத்தில்‌ நிலையான பாலங்கட்டித்‌ தண்ணீரைச்‌ சாலையின்‌ அடிவழியே பாயவிட்டால்‌ சாலைப்‌ போக்குவரவுக்குத்‌ தடையின்‌ றியிருக்கும்‌, பேருந்துகள்‌ செல்ல இந்த இடம்‌ மிகவும்‌ சிரமமாயுள்ளது, தனி ஏற்பாடுகள்‌ முன்‌ கூட்டியே செய்தாலன்‌ நி இவ்விடத்தை ஊர்திகளின்‌ வழிக்‌ கடப்பது மிக அருமையாம்‌. இந்த இடம்‌ சுதந்திரம்‌ பெற்றுக்‌ கால்‌ நூற்றாண்டாகியும்‌ தக்க வசதியின்றி விடப்பட்டிருப்பதிலிருந்து இக்‌ கிராமம்‌ எவ்வளவு ஒதுங்கியிருக்கிறது என்பதனை உணரலாகும்‌. பேரேரிக்குச்‌ சிறிது தொலைவில்‌ உள்ள மற்9ருரு பெரிய ஏரிப்பக்கத்தும்‌ இத்தகைய தொல்லை முன்பு இருந்துவந்தது. அங்குள்ள வாய்க்காலில்‌ நீர்‌ மிகுங்காலத்து அதன்‌ ஊடே, செல்லும்‌ சாலையின்‌ ஒரு பகுதி வெள்ளம்‌ நிரம்பி, வண்டிகள்‌ போகக்கூடாத நிலைமையாயிருந்தது. தாற்காலிகமான மரப்‌ பாலம்‌ அமைத்துத்தான்‌ மக்கள்‌ நடமாடிவந்தனர்‌. இந்த இடைவெளியால்‌ கொண்டை மலை வரையில்‌ பேருந்துகள்‌ 8 'பகவான்‌ பார்சுவநாதர்‌ ஞ்‌ செல்லக்கூடாத நிலை முன்பு நேர்ந்து வந்தது. இந்தப்‌ பகுதியில்‌ இறங்கி மக்கள்‌ நடந்தே சென்றுவர வேண்டியவராயினர்‌, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்‌, ஜைனப்‌ பெரு மக்களின்‌ நன்கொடையால்‌ ஒரு பாலம்‌ அமைக்கப்படவே, அத்‌ தொல்லை அதனுடன்‌ நின்‌ றது . இப்‌ பாலப்பணிக்கு முன்னின்று மக்களை ஊக்கி, நன்கொடை திரட்டிக்‌ கட்டி நிறைவேற்றியவர்‌ வேதாரணியம்‌ திரு. அனந்தராஜய்யன்‌ முதலியார்‌ அவர்களும்‌ நல்லூர்‌, திரு. 4. சின்னதுரை, ந.ஐ, அவர்களும்‌ ஆவர்‌. இப்‌ பாலத்திற்குத்‌ “திரு, அப்பாண்டை நாதர்‌ பாலம்‌? எனப்‌ பெயர்‌ சூட்டியுள்ளனர்‌. 20-8-1970ஆம்‌ நாள்‌ இந்தப்‌ பாலம்‌ திரு, அனத்தராஜய்யன்‌ முதலியார்‌ அவர்களால்‌ திறந்துவைக்கப்‌ பெற்றது. இதுபோன்றே இப்பொழுது பெரிய ஏரியிலிருந்து நீர்பாயும்‌ இடத்தும்‌ சிறியதொரு பாலம்‌ கட்டி, அதற்குச்‌ சந்திரதாதரின்‌ திருப்பெயரைச்‌ சூட்டலாம்‌. சைனப்‌ பெருமக்களின்‌ திருப்‌ பயணத்தலமாகச்‌ சிறந்து விளங்கும்‌ இவ்வூருக்குச்‌ செல்லும்‌ சாலை இன்னும்‌ திருத்தமுற அமையாதது வியப்பைத்‌ தருகிறது. அரசாங்கம்‌ முன்வந்து இவ்வூருக்குச்‌ செல்லும்‌ சாலையை நன்கு அமைத்து, குறிப்பிட்ட சில திருநாள்களின்‌ போது, தனிப்‌ பேருந்து வசதி உளுந்தூர்ப்பேட்டையிலிருந்து செய்யப்‌ படுமானால்‌, தொண்டர்‌ திருக்கூட்டம்‌ இங்குத்‌ திரண்டு வந்து கொண்டேயிருக்கும்‌, இத்தகைய ஒரு சூழ்நிலை உருவாகும்‌ போது கொண்டைமலை சைனப்‌ பெருமக்களால்‌ மட்டுமன்றி வரலாற்றுப்‌ பழமையைக்‌ காணவிழையும்‌ வரலாற்ருசிரியர்‌ களையும்‌ உல்லாசப்‌ பயணிகளையும்‌ பெரிதும்‌ கவரும்‌. திருத்தமில்லா இச்‌ சிறிய கிளைச்சாலை வழியாக இன்று வந்து போகும்‌ சைனத்‌ திருத்‌ தொண்டர்களுக்குக்‌ குறைவே யில்லை, திருப்பதி, திருத்தணி, பழனிமலைகளுக்கு இந்து 9 சமயத்தார்‌ சென்று பிரார்த்தனை செலுத்துவது போலவே சைனப்‌ பெருமக்களும்‌ இவ்வூருக்கு வந்து வழிபட்டு நேர்ச்சை செலுத்திப்‌ போகின்றனர்‌. பத்திப்‌ பரவசத்துடன்‌ சிராவகப்‌ பெருமக்கள்‌ இங்கு வந்து அப்பாண்டை நாதருக்குச்‌ சிறப்பு வழிபாடு செய்வதைக்‌ காண்பது கண்கொள்ளாக்‌ காட்சியாகும்‌. படை யாதுமின்றித்‌ தியானமாகிய வாளைக்‌ கொண்டு அணியாது அழகியானாய்த்‌ திருவளர்‌ தாமரைமலர்‌ மேலே நின்றருளும்‌ அப்பாண்டை நாதரின்‌ அருட்பார்வைக்கு இலக்காவார்‌ உலகச்‌ சுழற்சியி லிருந்து அமைதிநிலை பெறுவார்‌ என்பது திண்ணம்‌. இத்‌ திருமலையை அப்பாண்டை நாதர்‌ உலாப்‌ பாடிய அனந்தவிசயர்‌ பின்வருமாறு போற்றுகிருர்‌ : “கருமக்‌ கடலைக்‌ கணத்திற்‌ கடந்தோன்‌ தருமக்‌ கடலான்‌ தயாளன்‌ --திருமேவும்‌ அப்பாண்டை நாதன்‌ அடைந்தோர்‌ தமைக்காக்கும்‌ பொற்பாந்தள்‌ நீழலுறை போதனாம்‌---இப்பாரெண்‌ கொண்டை மலையாய்க்‌ கொழும்பசும்பொன்‌ மாமலையாய்‌ வண்டமிழோர்‌ போற்றும்‌ வனமலையாய்க்‌--கண்டோர்‌ சினமலையாய்‌ வேணு மலையாய்த்‌ திறவோர்‌ மனமகிழ்ந்து போற்றும்‌ மலையாய்‌--வனமுடைய நாகம்‌ மிகுமலையாய்‌ நன்மருந்து மாமலையாய்‌ ஆகும்‌ புகழஞ்‌ சினமலையாய்‌--சீர்கரமே ஆனபுக ழானமலை ஆணிவிழி காணுமலை ஆன சுரனசுர னானமலை--கோனுறையும்‌ டூதன்‌ மலை?-- (அ. உலா. 29-95) இத்தகைய வளமூடைய இந்த இனியமலை, இன்று கருங்கற்‌ பாறைகளாகக்‌ காட்சி தருகிறது. இங்கே சிறிதும்‌ பெரிது 10 மாகச்‌ சங்கிலிப்‌ பின்னல்‌ போன்ற பொற்றை முகடுகள்‌ மலையைச்‌ சூழவும்‌ உள்ளன. அவற்றை நோக்கும்போது தேவாதி தேவர்கள்‌ எல்லாம்‌ மலையைச்‌ சூழ்ந்து நின்று கரங்‌ கூப்பி வணங்குவதுபோலத்‌ தோன்றுகிறது. கொண்டையூரின்‌ வடபகுதியிலே இரண்டு பெரும்‌ கற்பாளம்‌ போன்ற பெருங்‌ கற்பாறைகளைத்‌ தன்மேல்‌ கொண்டதாய்க்‌ கண்ணைக்‌ கவரும்‌ சிறு குன்று காட்சி தருகிறது. இஃது அறுபதடி உயரமுள்ளது. எல்லாவற்றினும்‌ பெரியதாய்‌ அமைந்த இரண்டு கற்பாளம்‌ போன்ற பெரும்பாறைகளும்‌, எதிரெதிரில்‌ கிழக்கும்‌ மேற்கு மாய்‌, இயற்கையில்‌ அமைந்து உச்சியில்‌ ஒன்றாக இணையும்‌ நிலையில்‌ நெருங்கியுள்ளன.. இவ்விரண்டு பாறைகளுள்‌ கீழ்‌ பாலுள்ள பாறையில்‌ பார்சுவநாதரின்‌ திருவுருவம்‌ பொறிக்கப்‌ பட்டுள்ளது. இவர்‌ திருவுருவம்‌ பாறையிலேயே செதுக்கி அமைக்கப்‌ பெற்ற புடைப்புச்‌ சிற்பமாகும்‌ பார்சுவ நாதரின்‌ திருமுடியின்‌ மேலாக ஐந்தலைப்பாம்பின்‌ படமும்‌ அதன்மேல்‌ திருமுக்குடையும்‌ காட்சியளிக்கின்றன . இருபுறமும்‌ பறக்கின்ற நிலையில்‌ அமைந்த இருதேவப்‌ பணியாளர்களும்‌ உள்ளனர்‌. இவருடைய திருவடியின்‌ கீழே தாமரைமலர்‌ உள்ளது. அதன்‌ கீழே பாறையுடன்‌ இணைத்துக்‌ கல்மேடை ஒன்றும்‌ அமைக்கப்‌ பட்டிருக்கிறது. அப்பாண்டை நாதரின்‌ திருவுருவத்திற்கு வழிபாடு செய்வதற்காக இது பின்னாளில்‌ அமைக்கப்‌ பெற்ற தாகும்‌, ஸ்ரீ பார்சுவநாதர்‌ இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களுள்‌ இருபத்து மூன்றாம ராவர்‌. இவரை :அப்பர்‌” என்றும்‌. “அப்‌ பாண்டார்‌? என்றும்‌, “அப்பாண்டை நாதர்‌” என்றும்‌ ஆன்ரரூர்‌ முதல்‌ யாவரும்‌ அழைக்கின்றனர்‌, அப்பாண்டை நாதர்‌ என்ரால்‌, அப்பனாகவும்‌ ஆண்டையாகவும்‌ நம்மைக்‌ காத்தளிக்‌ கும்‌ இறைவன்‌ என்பது பொருளாம்‌. அப்பா, ஆண்டை, நாதா என்றெல்லாம்‌ இறைவனை அழைப்பது பக்தர்களிடைப்‌ பெரு வழக்காமன்்‌ ர? 11] திருநறுங்‌ கொண்டைத்‌ திருமலையின்‌ மேல்‌ செல்லுவதற்கு கிழக்குப்‌ பகுதியில்‌ தெற்கணையத்‌ திருத்தமுற அமைந்த படிக்‌ கட்டுகள்‌ உள்ளன. படிக்கட்டின்‌ வடபால்‌ தொடக்கத்தி லேயே மலைமேல்‌ ஏறப்‌ புகுவார்க்கு வலப்புறமுள்ள மேடையில்‌ , கிழக்குநோக்கி விருஷப தீர்த்தங்கரரின்‌ திருமேனி காணப்படு கிறது. இத்‌ திருவுருவம்‌ திருக்‌ கோயிலூருக்கு ஒன்பது மைல்‌ தொலைவில்‌ தென்கிழக்கில்‌ உள்ள பாவண்டூரிலிருந்து கொண்டு வரப்பட்டதென்றும்‌ சொல்லப்படுகிறது. " ௮ம்‌ மேடையின்‌ வடபுற மதிலோரமாகக்‌ காவல்‌ தேதேவதை களின்‌ உருவங்கள்‌ உள்ளன. இது சாத்தையனின்‌ உருவம்‌ போலும்‌. கல்லெழுத்துப்‌ பொறிக்கப்‌ பெற்ற கல்‌ ஒன்றும்‌ அதில்‌ உள்ளது. படிக்கட்டுகளைக்‌ கடந்து மேலே திருவாயிலிலுள்ள கோபுர வாயிலை அடையலாம்‌, அங்கிருந்து கிழக்குநோக்கி ஏற்ற மாகச்‌ செல்லும்‌ பாறைவழி மேலே சென்றோமாயின்‌, தென்‌ மேற்கு மூலையில்‌, நமக்கு இடப்புறமாக நீர்‌ நிரம்பிய ஓர்‌ இயற்கைச்‌ சுனை காட்சிக்கு இலக்காகும்‌. இதன்‌ நீர்‌ சற்றுப்‌ பாசி படிந்ததுபோல்‌ தோற்றமளிக்கிறது, ஒரு காலத்தில்‌ இச்‌ சுனைநீர்‌ பொங்கி அருவியாய்‌ வழிந்தது என்றும்‌ தெரிய வருகிறது. “சீரியலும்‌ தங்கோன்‌ சுனையருவி? என அனந்த விசயர்‌ தம்‌ உலாப்‌ பிரபந்தத்துள்‌ குறித்திருப்பது (849) இதற்குச்‌ சான்றுகும்‌. மேலும்‌, இச்‌ சுனையில்‌ அழகிய குவளை, வள்ளை முதலிய நீர்ச்‌ செடி கொடிகள்‌ நிரம்பிப்‌ பூத்துக்‌ கண்ணுக்கினிய காட்சி நல்கியதெனவும்‌ உலா ஆசிரியர்‌ குறிப்பிடுகிறார்‌ : 1, மிர்தரா101 0820112075, 5௦00) ௦௦% 9 மா, 1.5, நிவ, உ, & பூ 7௩.௰்‌ 1,௦0௦) -- 1826 481 ௦8 1962, 12 “சொற்கரியான்‌ வெற்பதனைச்‌ சூழ்ந்த சுனைதன்னில்‌ நற்குவளை போன்ற நயனத்தாள்‌--பொற்பணமாம்‌ ஐந்தலை நன்னாகத்‌ தணிநிழலோன்‌ பூஞ்சுனையில்‌ வந்த கொடி வள்ளை மணிக்குழையாள்‌? (௮ உலா. 481-492) எனவரும்‌ உலா-ஆசிரியரின்‌ சித்திரம்‌ இச்‌ சுனை, அழகின்‌ இருப்பிடமாய்‌ விளங்கியமையைப்‌ புலப்படுத்தும்‌, இன்றோ, பச்சை வண்ணராம்‌ பார்சுவநாதரை நினைப்பூட்டுவதுபோல அமைதியாய்ச்‌ சலனமின்றிப்‌ பசுமையூத்துக்‌ கிடக்கிறது. இச்‌ ௬னைப்‌ பகுதியிலிருந்து வலப்புறம்‌ திரும்பி மேலும்‌ சற்று ஏற்றமான சாய்வாய்‌ அமைந்த பாறை வழியே சென்றுல்‌ திருக்கோயிலின்‌ முன்‌ வாயிலை அடையலாம்‌. கோபுர வாயிலிலிருந்து மேற்கு நோக்கிய ஏற்றம்‌ சென்ற தும்‌ சுனைப்‌ பகுதியிலிருந்து வலப்புறம்‌ திரும்பிக்‌ கிழக்கு நோக்‌ கிச்‌ சன்னிதிக்கு வாராமல்‌, திருக்கோயிலை வலமாக வந்தும்‌ பத்தர்கள்‌ திருமுன்பை அடைகின்றனர்‌, இந்த வெளிச்‌ சுற்ருலை பள்ளம்மேடாக அமைந்த பாறை பரம்பிய வழியாகும்‌. திருக்‌ கோயிலின்‌ வெளிச்‌ சுற்றாலை மலைப்‌ பகுதியைச்‌ சூழ சதுர வடி.வில்‌ மதில்‌ எடுக்கப்பட்டிருக்கிறது. அம்‌ மதிலின்‌ தென்‌ புறக்‌ நோக்கினால்‌ குந்தவைப்‌'பேரேரியும்‌ திருநறுங்‌ கொண்டை யூரும்‌ நன்கு தெரியவரும்‌. வெளிச்‌ சுற்று மதிலின்‌ நாற்புறமும்‌ வெளியே சிறிது தொலைவு வரை அங்கங்கே சிறிதும்‌ பெரிது மான கற்‌ பொற்றைகள்‌ தலைநீட்டிக்‌ கொண்டிருக்கின்ற தோற்றம்‌ தேவகணத்தார்‌ தம்‌ பரிவாரங்களுடன்‌ மலையைச்‌ சூழவும்‌ நெருங்கி நின்று அப்பாண்டை நாதப்பெருமானுக்கு வணக்கம்‌ செலுத்துவது போலுள்ளது . வடபாலுள்ள வெளிச்‌ சுற்று மதிலில்‌ ஒரு வாயில்‌ அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்‌ வாயில்‌ அந்நாளில்‌ அடிவாரத்‌ துள்ள பேரேரிக்குச்‌ சென்று திருக்கோயிலுக்கான நீர்‌ முகந்து வருவதற்காகப்‌ பயன்படுத்தப்‌ பெற்ற வழியாகும்‌. ஆனால்‌, 18 இப்பொழுது அப்பக்கத்துள்ள ஏரியும்‌ தூர்த்த நிலையில்‌ உள்ளது; படிக்கட்டுகளும்‌ சிதைந்து போய்விட்டன. திருக்கோயிலின்‌ முகப்புச்‌ சன்னிதி கிழக்கு நோக்கி யுள்ளது. கொடிமரத்தையும்‌ முகப்பு மண்டபத்தையும்‌ தாண்டி உள்ளே திருவாயிற்படி. ஏறும்போது, எதிரே சந்திரநாதரின்‌ திருவுருவம்‌ முதலில்‌ காணப்படும்‌. வெளிமூகப்பு மண்டபத்தை அடுத்திருந்த பதுமாவதியம்மன்‌ கோயில்‌ இப்பொழுது பழுது பட்டுள்ளது. ஆகவே, அங்கிருந்த அம்மையாரின்‌ திருவுருவம்‌ ஸ்ரீ சந்திரநாதர்‌ திருக்கோயிலின்‌ சந்நிதி அர்த்தமண்டபத்தின்‌ வடபால்‌ தென்திசை நோக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றும்‌ தருமதேவி, இயக்கி முதலியோர்‌ திருவுருவங்களும்‌ அதே வரிசையில்‌ உள்ளன. ஸ்ரீ சந்திரநாதர்‌ திருக்கோயிலின்‌ தென்சார்பிலும்‌ பெரும்‌ பாளப்பாறை ஓன்று உள்ளது. இதனோடு சேர்த்துச்‌ சந்திர நாதர்‌ திருக்கோயில்‌ அமைக்கப்பட்டிருக்கிறது. இவருடைய கோயிலை வலம்‌ வரும்‌ நிலையில்‌ சுருங்கிய அளவிலான உள்‌ சுற்றாலையும்‌ திறந்தவெளியும்‌ உள்ளது. தென்புறச்‌ சுற்ருலை பாறையுடன்‌ இணைந்து செல்லுகிறது, ஸ்ரீ சந்திரநாதரை வலம்‌ வந்து சன்னிதிமுன்‌ அர்த்த மண்டபத்திலிருந்து நோக்கும்போது, அவர்‌ வெண்ணிறத்‌ திருமமேனியுடையராய்‌ மண்டலமிட்டு மலர்மேல்‌ அமர்ந்த நிலையில்‌ தியான ரூபியாய்க்‌ காட்சி தருகிறார்‌. இவருடைய திருவுருவம்‌ வெள்ளைப்‌ படிகக்கல்லால்‌ சமைக்கப்‌ பெற்றது போலக்‌ காட்சி தருகிறது. அது சுதை முதலியவற்றாலான திருவுருவம்‌ என்றும்‌ தெரிந்த ஒரு சிராவகர்‌ சொல்லக்‌ கேள்வி. அவரைத்‌ தாம்‌ பாடிய உலாவில்‌ அனந்தவிசயர்‌, “சந்திர காந்தப்‌ படிகச்‌ சந்திரநன்‌ னாதனே? (௮, உலா, 17) என்று போற்றுவதால்‌ அவருடைய பளிங்குத்‌ திருமேனியின்‌ பழமை புலப்படும்‌. 14 ஸ்ரீ சந்திரநாதரின்‌ சன்னிதியின்‌ முன்னர்‌ உள்ள அர்த்த மண்டபத்தின்‌ வடபால்‌ நடுப்பகுதியில்‌ உள்ள இருபாறைகளின்‌ இடைவெளி வழியே பார்சுவநாதரின்‌ சன்னிதிக்குச்‌ செல்ல வேண்டும்‌. பாறைமேல்‌ சாய்வாகவுள்ள இடைவெளிவழி மேலே சென்றால்‌, அப்பாண்டைநாதரின்‌ சந்நிதியை அடை கிரோம்‌. சந்நிதி முன்பும்‌, அதனை அடுத்து அப்பாண்டை நாதரின்‌ வலப்புறமாக வடபால்‌ உள்ள சமதளமண்டபம்‌ இரு. பெரும்‌ பாறைகளையும்‌ இணைத்துக்‌ கட்டப்பட்டிருக்கிறது. இதில்‌ பாறையின்‌ அகத்து முன்னாளில்‌ முனிவர்கள்‌ வாழ்ந்த பாழியும்‌ உள்ளதாக அவ்வூரார்‌ ஒருவர்‌ உரைத்தனர்‌. அப்பாண்டை நாதரின்‌ எதிரிலும்‌ வலப்புறமாகவும்‌ மக்கள்‌ அமர்த்து தியானம்‌ செய்வதற்கேற்ற நிலையில்‌ இம்‌ மண்டபம்‌ உள்ளது. இதில்‌ உற்சவ மூர்த்தங்கள்‌ வடபக்கச்‌ சவர்‌ ஓரமாகவும்‌ கிழக்குப்‌ பக்கமும்‌ வைக்கப்பட்டுள்ளன. அப்‌ பாண்டை நாதரின்‌ எதிர்ப்பக்கமுள்ள பாறையின்‌ இடப்பக்க மாக ஒரு நிலைத்‌ தூணிலும்‌ அப்பாண்டை நாதரின்‌ இடப்புறமாக மேற்கூரையிலிருந்தும்‌ இரண்டு மணிகள்‌ தொங்கவிடப்‌ பட்டுள்ளன. ஸ்ரீ சந்திரநாதர்‌ சன்னிதியின்‌ வடபுறமாகவும்‌ திரு மலையின்‌ வடபுறமாகவும்‌ அப்பாண்டை நாதரின்‌ சன்னிதி உள்ளமையால்‌ அவர்‌ நின்றருளும்‌ திருக்கோயிலை *வடபாழி3 என ஆன்றோர்‌ குறிப்பிட்டுள்ளனர்‌. ௭ *மிக்கவட பாழியான்‌ பாறவினை பாழியா நன்மையரு ளாழியான்‌ வாழியற வாழியான்‌? (௮. உலா. 11-12) என அனதந்தவிசயர்‌ தம்முடைய உலாவில்‌ அப்பாண்டை நாதரை *வடபாழியான்‌? என குறிப்பிடுதல்‌ காணலாம்‌, 1௮ வடபாழியானின்‌ திருவுருவம்‌ கிழக்குப்‌ பெரும்பாறையில்‌ குடைந்து புடைப்புச்‌ சிற்பமாகப்‌ பொறிக்கப்‌ பெற்றிருக்கிறது. அப்பாண்டை நாதர்‌ நின்ற திருக்கோலத்தில்‌ இரு கரங்களையும்‌ தொங்கவிட்ட நிலையில்‌ தியானமூர்த்தியாய்‌ விளங்குகிளுர்‌ . இவர்தம்‌ திருவடிகளின்‌ கீழ்‌ தாமரைமலர்‌ உள்ளது. மேலே ஐந்தலை நாகம்‌ தன்‌ படத்தால்‌ அணி செய்து விளங்குகிறது. அதற்கும்‌ மேலாகத்‌ திருமுக்குடை காட்சி தருகிறது. இரு புறமும்‌ இரண்டு தேவர்கள்‌ ஏத்துவது போன்ற உருவமும்‌ பாறையில்‌ பொறிக்கப்பட்டிருக்கிறது. மேற்குத்‌ திக்குநோக்கி அப்பாண்டை நாதர்‌ அருட்காட்சி நல்குகிறார்‌, இவர்தம்‌ திருவுருவம்‌ உள்ள பாறையோடும்‌ எதிடரயுள்ள மேற்குப்‌ பெரும்‌ பாறையுடனும்‌ இணைத்துக்‌ கல்லால்‌ மண்டபம்‌ கட்டப்பட்டிருக்‌ கிறது. இம்‌ மண்டபத்தின்‌ மேலைச்‌ சுவரில்‌ சிறிய கற்புழை களும்‌ அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின்‌ வழியாக வெளிச்சம்‌ உள்ளே வந்து பரவுகிறது. பெருமானின்‌ திருமேனியில்‌ எவ்வகையான ஆடை அணிகளும்‌ இல்லை; சாத்துவதும்‌ இல்லை. அவன்‌ திகம்பரனாய்த்‌ திகழும்‌ பெருமான்‌, *அரையதனில்‌ ஆடையணியா தழகன்‌ * (௮. உலா. 174) என்கிறார்‌ அனந்தவிசயர்‌, பகவானின்‌ திருப்பாதங்களில்‌ மலர்‌ வைத்து வணங்குகின்றனர்‌. அப்பாண்டை நாதருக்குத்‌ திருமஞ்சனம்‌ நடைபெறுகிறது. பால்‌, தயிர்‌, இளநீர்‌, பழங்கள்‌, சந்தனம்‌ முதலியவற்றால்‌ திருமுழுக்காட்டுகின்றனர்‌. தேன்‌ மட்டும்‌ இங்கு அபிஷேகத்‌ திற்குச்‌ சேர்க்கப்படுவதில்லை. சிறப்பு நிகழ்க்சிகளின்போது அபிஷேகம்‌ பெரிய அளவில்‌ நடைபெறுகிறது. அனந்த விசயரும்‌ தம்முடைய உலாவில்‌, அப்பாண்டை நாதரை, “கற்பூரட்‌ டாதி கமழ்குங்‌ குமமுடனே செப்பரிய கந்தாபி ஷேகத்தன்‌” (௮. உலா. 141) என்றும்‌, 16 ர்‌ 1 1 *மணமகிழ்ந்த கெந்தாடி மால்போற்றி (௮. உலா. 299) என்றும்‌ அப்பெருமானின்‌ திருமுழுக்கினைச்‌ சிறப்பாகப்‌ போற்றி யுரைக்கின்ளுர்‌. ஞானத்தின்‌ திருவுருவாய்‌ விளங்கும்‌ அப்பாண்டை நாதரைப்‌ பத்தி சிரத்தையுடன்‌ தேவரும்‌, விஞ்சையரும்‌, மன்னவரும்‌, சிராவகரும்‌ பணிந்தேத்திப்‌ பிறவிப்‌ ப ரும்‌ பயனைப்‌ பெறத்‌ திரளுகின்றனராம்‌. இன்றும்‌ பத்தர்‌ குழாம்‌ வந்து வழிபாடு செய்தவண்ணம்‌ உள்ளது. அப்‌ பெருமானைப்‌ போற்றி வழிபட்டு உய்வதற்கு அனந்தவிசயர்‌ தம்முடைய உலாமாலையில்‌ ஒரு போற்றிமாலையும்‌ தருகிறார்‌, அது வருமாறு : காமாதி வென்ற கடவுளடி. போற்றி 1 பூமாலை பூணாப்‌ பொருள்போற்றி /--தாமெண்‌ குணமுடையாய்‌ போற்றி 1! கோதி லறமே மணமலிந்த கெந்தாடி மால்போற்றி!--குணமார்ந்த நீதியாய்‌ போற்றி 1 நிலாவெயிலாய்‌ தான்போற்றி ! ஆதியாய்‌ போற்றி 1 அயன்‌ போற்றி!--நீதிசேர்‌ மூவொளியாய்‌ போற்றி 1! மூவா முதலான பூவலரும்‌ பிண்டிப்‌ பொருள்‌ போற்றி1--தேவனே. நின்மலனே போற்றி 1 நிராயுதனே போற்றி ! கன்மமிலா ஞானக்‌ கடல்போற்றி!1---நன்மை பரஞ்சோதி போற்றி 1! பணாநிழலோய்‌ பற்றி 1 நிரஞ்சனனே போற்றி 1 நிழல்‌ போற்றி1--பரவுவினை மாற்றிவரு வாய்‌ போற்றி ! மன்னுபுக ழாய்‌ போற்றி! போற்றியே போற்றி! (அ.உலா. 288-244) இப்‌ போற்றிமாலையால்‌ எம்பெருமானை என்றென்றும்‌ போற்றி வழிபடுவோமாக ! 11 அப்பாண்டை நாதர்‌ திருவுருவம்‌ இம்‌ மலைப்பாழியில்‌ மூன்பு வாழ்ந்திருந்த தவமுூனிவர்களால்‌ அமைக்கப்‌ பெற்ற தாகும்‌. கால வெள்ளத்தில்‌ பெருமானின்‌ திருவுருவம்‌ இருந்த பகுதிகள்‌ எல்லாம்‌ மண்மேடிட்டு மறைக்கப்பட்டிருந்ததாம்‌. அதன்‌ மேலே செடி கொடிகள்‌ முதலியனவெல்லாம்‌ தூறு களாய்‌ மண்டிக்‌ கிடந்தன. ஒரு சமயம்‌ மருந்து மூலிகைகளை வெட்டியெடுக்கச்‌ சென்ற வேடர்‌ சிலர்‌, பெருமான்‌ இருந்த பகுதியில்‌ மண்வெட்டி கொண்டு வெட்டலாயினர்‌. அப்பொழுது மண்வெட்டி பெரு மானின்‌ முன்கால்‌ பகுதியில்‌ பட்டு, வடுவும்‌ உண்டாயிற்று. இப்பொழுதும்‌ முன்பு வேடர்களால்‌ நேர்ந்த வடு இதுவாகும்‌ என்று முன்‌ திருக்கால்களில்‌ அருச்சகர்‌ விளக்கொளியைக்‌ காட்டி விளக்குகின்றார்‌, வேடர்களால்‌ தற்செயலாகக்‌ கண்டு பிடிக்கப்பட்டுப்‌ பின்னர்‌ மக்களுக்குத்‌ தெரிய வந்ததாம்‌. இச்‌ செய்தியை இத்தலம்‌ பற்றிய பாடல்களிலும்‌ கவிஞர்‌ இணைத்துப்‌ பாடி யுள்ளனர்‌; வாய்மொழியாக வழங்கும்‌ ஒரு நாட்டுப்பாடலும்‌ உள்ளதாம்‌. தமிழகத்தில்‌ உள்ள பெரும்பாலான மலைகளில்‌ காணப்‌ படும்‌ ஜினர்‌ பள்ளிகளைப்‌ போன்றதொரு பள்ளியாகவே இம்‌ மலைப்பாழி முன்‌ காலத்தில்‌ அமைந்திருந்தது. அங்கு வசித்த தவத்தவர்‌ மறைந்த பின்னர்‌ காலகதியில்‌ அப்பகுதி மண்‌ மூடிப்போய்ச்‌ செடி கொடிகள்‌ முளைத்துத்‌ தூறுமண்டியிருக்க லாம்‌. பின்னாளில்‌ வேடரால்‌ பெருமானின்‌ திருவுருவம்‌ கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே மண்டபங்களும்‌ கோபுரங்களும்‌ அமைத்துத்‌ திருக்கோயில்‌ கட்டப்பட்டிருக்க வேண்டும்‌ என்று ஊகிக்க இடமுண்டு. 18 திருநறுங்கொண்டையிலுள்ள பழைய கல்வெட்டுகள்‌, இவ்வூர்‌ நடுவில்‌ மண்டலத்துத்‌ திருமுனைப்பாடி நாட்டைச்‌ சார்ந்துள்ளதாக அறிவிக்கின்றன. திருமுனைப்பாடி நாடு என்பது பெண்ணையாற்றால்‌ வளம்‌ பெருக்கப்படும்‌ பகுதி. சோழராட்சிக்‌ காலத்தில்‌ இது * ராஜராஜ வளதாட்டுத்‌ திருமுனைப்பாடி?” என வழங்கப்‌ பெற்றது. 1. “ராஜராஜ வளநாட்டுத்‌ திருமுனைப்பாடி நாட்டுத்‌ திருநறுங்கொண்டை ” (8.11. 7௦1. 11, 1011) 8... *ராஜராஜ வளநாட்டுக்‌ குன்றத்தூர்‌ நாட்டுத்‌ திருநறுங்கொண்டை ” ்‌ (8௭.1. 7௦1. ௫1, 1012) 8. *முனைப்பாடிப்‌ பள்ளிச்‌ சந்தம்‌ திருநறுங்கொண்டை (5.1.1. 7௦2. 1, 1015) 4. “ராஜராஜ வளநாட்டுத்‌ திருமுனைப்பாடிக்‌ குன்றத்தூர்‌ நாட்டுத்‌ திருநறுங்கொண்டை * (310 ௦8 1939-40) 5. “நடுவில்‌ மண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு குறுக்கைக்‌ கூற்றத்து ஆதனூர்ப்‌ பற்றுத்‌ திருநறுங்கொண்டை £ (303, 304 ௦ 1939-40) திருநறுங்கொண்டையைத்‌ ': திருநறுங்‌ குன்றம்‌ ” எனவும்‌ இப்பொழுது வழங்குகின்றனர்‌. இத்‌ திருத்தல அருகர்‌ தோத்திரப்‌ பூந்துணருக்கு * பல ஜினதாசர்களால்‌ பாடப்பெற்ற திருநறுங்குன்றம்‌ அப்பாண்டை நாதர்‌ தேோத்திரத்திரட்டு ” எனப்‌ பெயர்‌ சூட்டியுள்ளனர்‌. “திரு? என்னும்‌ சிறப்படை மொழியைப்‌ புள்ளியிட்டு காட்டியுள்ளனர்‌... எனவே, நறுங்‌ குன்றம்‌ என்பதுவே இதன்‌ இயற்பெயர்‌ என்பது போதரும்‌, £ நறுங்குன்றம்‌ ? என்னும்‌ வழக்கு மிகவும்‌ பிற்பட்டெழுந்த 19 தாகும்‌. இத்‌ தலத்துள்ள சாசனங்களும்‌, சாசனப்‌ பாடல்‌ களும்‌, பழைய நூல்களும்‌, பல காலங்களில்‌ பாடப்பெற்ற தோத்திரப்பாக்களும்‌ *திருநறுங்கொண்டை? என்றே குறிப்பிடு கின்றன, இலக்கியப்‌ பாடல்கள்‌ சிலவற்றில்‌ நறுங்கொண்டை, * கொண்டை? என்றும்‌ இவ்வூர்ப்‌ பெயர்‌ குறிக்கப்பட்டிருத்தல்‌ காணலாம்‌. அப்பாண்டை நாதர்‌ உலாவில்‌ ஓரிடத்து * சிரீ கொண்டை? (498) என்றும்‌ இவ்வூர்ப்‌ பெபெயர்‌ சுட்டப்‌ பட்டுள்ளது . *திருநறுங்கொண்டை” என்னும்‌ இவ்வூரின்‌ பெயரை, “திரு: என்னும்‌ அடைமொழியின்றி *“நறுங்கொண்டை? எனவும்‌,” அடைமொழி எதுவுமின்றிக்‌ *கொண்டை” எனவும்‌“? இலக்கியப்‌ புலவர்கள்‌ வழங்குகின்றனர்‌. ஊரின்‌ பெயராதலேயன்றி இக்‌ “கொண்டை? என்பது அங்குள்ள திருமலையையும்‌” சினாலயத்தையும்‌” குறித்தும்‌ வழங்கப்படுகிறது . கொண்டை மலையில்‌ திகழ்வதனால்‌ அப்பாண்டைநாதர்‌ “கொண்டையான்‌” என்றும்‌ அழைக்கப்படுகிரார்‌. கொண்டை. மலையும்‌ *சிர்ோகொண்டை”?? என்று சிறப்படை பெறுகிறது. 1. நறுங்கொண்டை: அப்பாண்டை நாதர்‌ உலா, கரப்பு 1, £; கண்ணி 94, 119, 427, 507, 618. 2. கொண்டை; அப்பாண்டை நாதர்‌ உலா, கண்ணி 98, 86, 94, 446, 685. 8. “நறுங்‌ கொண்டை நகர்‌? ௮. உ௰ர, 94. ஈநறுங்கொண்டை? அ உலா, காப்பு 1, £ 94,119, 427, 607. கொண்டை? அ உலா, 89, 507, 886, 618. 5. “ிகரண்டைமலை? ௮. உலா, 91, 66, 498, 508. “கொண்டைகிரி? அ. உலா க்45. 6. “கொண்டை சினறாலயம்‌? அ. உலா. 86. *சிர்கொண்டை” ௮, உலா. 488. 20 “கொண்டை? என்பது உச்சி, மலைக்குன்று, மலை என்னும்‌ பொருள்‌ தருவதாகும்‌. நாகார்ச்சுனைகொண்டா, ரேணி கொண்டா, பள்ளிகொண்டா முதலிய ஊர்ப்‌ பெயர்களிற்போல இங்கே கொண்டை என்பது மலையைக்‌ குறிப்பது என்பது தெளிவு. பூமிக்குக்‌ குடுமிபோன்று தலை தூக்கியுள்ளமையால்‌ மலை என்பது கொண்டை என்னும்‌ பெயரையும்‌ பூண்டிருக்க லாம்‌. கொண்டைகிரி (445), கொண்டைமலை (31, 65, 498, 503) என அப்பாண்டைதாதர்‌ உலாவில்‌ வரும்‌ வழக்குகளும்‌ சிந்திக்கற்பாலன . மேலும்‌, சினகிரி, உச்சந்தவாழ்மலை, வடபாழி, வட திருமலை, திருமேற்றிசை முதலிய பெயர்களும்‌ இத்‌ தலத்திற்கு உண்டு. “சினகிரி யப்பர்க்கு” (299 ௦7% 939-40) “சினகிரி வாழ்ய்யன்‌? (௮, உலா. 55) *நற்கமல மீதுறையும்‌ தாதன்‌ சினகிரிமேல்‌” (௮. உலா. 433) “பச்சை மரகதமேய்‌ பாளைப்‌ பரிமளத்தாள்‌ உச்சயந்த வாழ்மலைமேல்‌ ஒங்குவாள்‌” (௮. உலா. 74) பிறவிப்‌ பெருங்கடலை நீந்திய பெய்வளையாய்‌ உறவுத்‌ தமர்‌ வாழும்‌ உச்சந்த வாழ்மலைமேல்‌ அறமிகவும்‌ செய்யும்‌ அம்மையடி யிணைகள்‌ நறை மிக்க பூவணையால்‌ நல்கிப்‌ பொழிந்தேத்தி” (திருவெம்பாவை, 16) “மிக்க வட பாழியான்‌? (௮. உலா. 11-12) *வடபாழிப்‌ புயல்‌ வண்ணனே? (திருமேற்‌, ௮. 3.) (ஆதியே) திரு நறுங்‌ கொண்டை வடதிரு மலைமே லப்ப னேயடி யேனையு மஞ்சலென்‌ றருளே ” (சம்பந்தர்‌ பதிகம்‌ 1-11) 21 “திருமேற்றிசைச்‌ செல்வன்‌” (திருமேற்‌. ௮. 88) *திருமேற்றிசையான்‌ ? (அ. உலா. 533) இங்குள்ள பெரிய ஏரிக்குக்‌ :குந்தவைப்பேரேரி? என்பது பெயர்‌. இதனை இராசராசசோழனின்‌ சகோதரியான குந்தவைப்பிராட்டியார்‌ செய்வித்தமையால்‌ இதற்கு இப்‌ பெயர்‌ வழங்குவதாயிற்று. “குந்தவைப்‌ பேரேரி: (5. 1, 1, 701-411, 1017) *இவ்வூர்ப்‌ பெரிய ஏரி? ($ 1,1. 901-911, 1015) *இத்திரு நறுங்‌ கொண்டையில்‌ குந்தவைப்‌ பேரேரி உடைப்பின்பாடு திருத்திவிட்ட நிலத்து? (310 ௦8 1936-40) இந்த ஏரிக்கு ஆற்றூரைச்‌ சேர்ந்த பெருமாள்‌ என்பவர்‌ நீர்‌ பாய்வதற்கான தூம்பு ஒன்று அமைத்த செய்தி சாசனப்‌ பாடல்‌ ஒன்றால்‌ தெரியவருகிறது . *மாட மதிளாறை மன்னு புகழ்ப்‌ பெருமா னீடு நறுங்கொண்டை. நெல்விளையப்‌--பீடார்ந்த காருக்கு நேராகு மாண்கையன்‌ கார்க்கடல்போல்‌ ஏரிக்குத்‌ தூம்பமைத்தான்‌ இன்று,” (325 ௦1 1939-40) கார்க்கடல்‌ போன்றது குந்தவைப்‌ பேரேரி என வருணிக்‌ கப்படுவதால்‌ இதன்‌ பெரும்பரப்பு நன்கு புலனாகும்‌. திருநறுங்‌ கொண்டை அப்பாண்டை நாதரின்‌ திருக்‌ கேரயிலை £ நாற்பத்‌ தெண்ணாயிரப்‌ பெரும்பள்ளி? என்றும்‌ ஒரு கல்வெட்டுக்‌ குறிப்பிடுகிறது (6. 1.] 01-41, 1014) “பள்ளி” என்பது சைன சமயத்‌ தவத்தோர்‌ தவம்புரிந்த குகைகளைக்‌ குறிக்கும்‌. 22 இதனைப்‌ “பெரிய பாழி? என்றும்‌ ஒரு சாசனம்‌ சுட்டுகிறது (8.7.1. 401-711, 1015). பாழி என்பது இடம்‌, கோயில்‌, நகரம்‌, ஊர்‌, பாசறை, முனிவர்‌ வாழிடம்‌, குகை முதலிய பல பொருள்‌ பயக்கும்‌ சொல்லாகும்‌. எனினும்‌ இப்‌ *பாழி? என்பது சிறப்பாகத்‌ துறவு பூண்டொழுகுஞ்‌ சான்றோர்‌ இருப்பிடங்களை ச்‌ சுட்டுவதாகக்‌ கொள்வதே ஈண்டைக்குப்‌ பொருத்தமாகும்‌. எனவே, இத்‌ திருத்தலம்‌ சமண சமயச்‌ சான்றோர்‌ பலரின்‌ இருப்‌ பிடமாக முன்பு விளங்கியமை போதரும்‌. திருநறுங்‌ கொண்டைப்‌ பாழியில்‌ சமண முனிவராகிய சான்‌ ரோர்‌ பலர்‌ வாழ்ந்திருந்தனர்‌. இங்கே மெய்ஞ்ஞானியாகத்‌ திகழ்ந்த குணபத்திர முனிவர்‌ *வீரசங்கம்‌? என்பதை நிறுவினார்‌. இதனால்‌ இவருக்கு ₹வீரசங்கப்‌ பிரதிஷ்டாச்‌ சாரியர்‌*? என்னும்‌ பெயர்‌ வழங்குவதாயிற்று. இம்‌ மூதூரில்‌ தவத்‌ தவர்‌ சங்கமும்‌ நற்றமிழ்‌ வல்ல புலவர்‌ குழுவும்‌ எண்‌ திக்கும்‌ புகழச்‌ சீருஞ்‌ சிறப்புமாக விளங்கின. *இடரழுங்‌ கும்பரிசு சுடர் விளங்‌ குங்கனகம்‌ எனவருந்‌ துந்தி ருவுளத்‌ திடதவங்‌. கொண்டுசெறி பவர்கடஞ்‌ சங்கம்வளர்‌ திருநறுங்‌ கொண்டைமலையே” (திருநறுங்‌ கொண்டை மலையின்‌ பேரில்‌ பதிகம்‌: 6) *உற்றதுணை யுன்னடிக்கே யறன்றான்‌ வீர வோங்குதன்ம தேவதையு முயரு மூதூர்‌ நற்றமிழ்சேர்‌ நறுங்கொண்டை யருகா வுன்னை நம்பினேன்‌ நின்பதத்தை நல்கு வாயே”? (அப்பர்‌ பாடிய பதிகம்‌ : 2) இவ்வாறு அப்பர்‌, சம்பந்தர்‌ முதலியோர்‌ பாடிய துதிப்‌ பாடல்களில்‌ வீரசங்கத்தையும்‌ முனிவர்‌ திருக்குழாங்களையும்‌ தமிழ்ப்புலமை மிக்காரையும்‌ போற்றியுள்ளமை காணலாம்‌. குணபத்திர முனிவர்‌ சூடாமணி நிகண்டினை ஆக்கிய வீரை மணடல புருடரின்‌ குருவுமாவர்‌. இவரைப்‌ போற்றும்‌ 29 பாடல்‌ ஒன்று அப்பாண்டை நாதர்‌ கோயில்‌ கோபுர வாயிலின்‌ மேல்தளத்தில்‌ உள்ள கல்வெட்டில்‌ காணப்படுகிறது. *வண்டமிழின்‌ பண்பும்‌ வடநூலும்‌ நன்குணர்ற்து தெண்டிரைசூழ்‌ மண்மீது சீர்பெற்ருன்‌--கொண்டைமலை வித்தகன ருட்கடல்மி குத்தபுகழ்‌ வெற்பிலிசை வைத்தகுண பத்திரமுனி வன்‌” என்னும்‌ இப்‌ பாடல்‌ குணபத்திர முனிவரின்‌ தமிழ்‌-வடமொழிப்‌ புலமையை நன்கு சிறப்பித்துரைத்தல்‌ காணலாம்‌. இப்‌ பெரு முனிவரையும்‌ இவர்தம்‌ சீடராகிய மண்டல புருடரையும்‌ அப்பாண்டைநாதர்‌ உலாப்பாடிய அனந்தவிசயரும்‌ அன்புடன்‌ இறைஞ்சிப்‌ புகழ்ந்துரைக்கிரறுர்‌. “ஆமாரி யார்கள்‌ அமைந்தசத பத்திர மாமாலை சொற்கொண்ட மாதவன்‌--பாமாலை மண்டல மகாபுருடன்‌ மன்னியவீ ரேந்திரனால்‌ கண்ட நிகண்டின்‌ கவிசிறந்தோன்‌-- கொண்டை குணபத்திர மாமுனிவன்‌ கொண்டுலகம்‌ ஏத்தக்‌ கணதரராய்க்‌ காசினியில்‌ வந்தோன்‌--குணதரனாம்‌ இம்முனிவன்‌ பாதம்‌ இறைஞ்சி யியல்பாகச்‌ செம்மையுடன்‌ நான்ுழுது செப்பவே?-- (௮. உலா, 82-85) மேலும்‌, சிற்றாமூர்‌ தருமதேவி ஊசலில்‌, அக்‌ கவிஞர்‌ திரு நறுங்‌ கொண்டையை வாழ்த்துமிடத்து, £ அருட்‌ சிந்தை யிளங்கொடிக எாசுபாடி, அதன்முன்னும்‌ சம்பந்தன்‌ பாடல்கொண்டு குறிச்‌ செல்வன்‌ குணபத்திர முனிவன்‌ சிந்தை குடிகொண்ட அப்பனறுங்‌ கொண்ட வாழ்த்தி? (சிற்றாமூர்‌ தருமதேவி ஊசல்‌ 6) என அப்பாண்டை நாதரைக்‌ குணபத்திர முனிவனின்‌ சிந்தை யையே கோயிலாகக்‌ கொண்டவர்‌ என்று புகழ்ந்துரைத்தலால்‌ 24 ௮ம்‌ முனிவருக்கும்‌ திருநறுங்கொண்டைத்‌ திருத்தலத்திற்கும்‌ உள்ள நெருங்கிய தொடர்பு இனிது விளங்கும்‌. குணபத்திர முனிவர்‌ ஏற்படுத்திய வீரசங்கமும்‌, அவரைப்‌ போலவே வடமொழி, தென்மொழி வல்ல புலவர்‌ பெருமக்கள்‌ நிறைந்ததாய்‌, வழிவழியாகத்‌ தமிழகத்திலே புலமைக்கோர்‌ பெரும்நிலையமாய்‌ வீளங்கி வந்தது என்பது பிற வரலாற்றுக்‌ குறிப்புகளாலும்‌ செவிவழிச்‌ செய்திகளாலும்‌ தெரியவருகின்‌ றன. கல்வியில்‌ சிறந்த கம்பர்‌ தாம்‌ இயற்றிய இராமாயணப்‌ பெருங்காவியத்தை இங்கு வாழ்ந்த சமணப்‌ புலவர்கள்‌ முன்‌ னிலையில்‌ அரங்கேற்றி அவர்களின்‌ ஒப்புதலைப்‌ பெற்றார்‌ என்று சொல்லுகின்றனர்‌. ” கிட்கிந்தா காண்டம்‌ நாடவிட்ட படலத்திலே சுக்கிரீவன்‌ அனுமனுடன்‌ தென்‌ திசைச்‌ செல்லும்‌ வானரவீரர்க்கு வழி கூறு மிடத்து வடசொற்கும்‌ தென்சொற்கும்‌ வரம்பாய்‌ நிற்கும்‌ திரு வேங்கடமலையை அறிமுகப்படுத்துகிறான்‌. இந்த இடத்தில்‌ திருவேங்கடமலையில்‌ உறையும்‌ உயிர்தவத்தவராகிய அருக முனிவரின்‌ அளப்பில்‌ பெருமையை அவன்‌ எடுத்து மொழிகிருன்‌ : இருவினையும்‌, இடைவிடா எவ்‌ வினையும்‌, இயற்றாதே, இமையோர்‌ ஏத்தும்‌ திருவினையும்‌, இருபதம்$ேதர்‌ சிறுமையையும்‌, முறை ஒப்பத்‌ தெளிந்து நோக்கி, “கரு வினையது இப்பிறவிக்கு? என்று உணர்ந்து, அங்கு அது களையும்‌, கடை இல்‌ ஞானத்து, அரு வினையின்‌ பெரும்பகைஞர்‌ ஆண்டுஉளர்‌: ஈண்டு இருந்தும்‌ அடி வணங்கற்பாலார்‌” (கம்ப, கிட்கிந்தா, நாடவிட்ட, 27) 1, தீக096 101617101 ககர 68) 5௦ கா௦௦% நர ற. 2. &. 3௮128, 8. &்‌., (01005) ட. (௦0௦), 1,416 மேரகர்கோ, ]ீகம்ஷ 16௦01 014௦௦, 162. 1826 481. 2௫ இருவினை கடிந்து கடையில்‌ ஞானத்தோராய்‌ வாழ்ந்த அருகமுனிவரை *அருவினையின்‌ பெரும்பகைஞர்‌? என்றும்‌, அவர்‌ திக்குநோக்கித்‌ தொழற்குரிய பெரியராவர்‌ என்பதனை “ஈண்டு இருந்தும்‌ அடிவணங்கற்பாலார்‌? என்றும்‌ கம்பர்‌ மனங்கசிந்து போற்றுகிறார்‌. இப்‌ போற்றுதல்‌ பாட்டையும்‌ “வீர சங்கத்தவர்க்கு? அவர்‌ வாசித்துக்‌ காட்டினார்‌ என்பர்‌. மற்றும்‌ அருகமுனிவர்‌ வாழும்‌ அம்‌ மலையை அடுப்பார்‌ வீடு பேற்றுக்குரிய நெறிச்‌ செல்வர்‌ என்னும்‌ குறிப்பையும்‌ கம்பர்‌, கோடு உறு மால்‌ வரையதனைக்‌ குறுகுதிரேல்‌ உம்நெடிய கொடுமை நீங்கி வீடு உறுதிர்‌; ஆதலினால்‌ விலங்குதிர்‌; அப்‌ புறத்து, நீர்‌ மேவு தொண்டை நாடு உறுதிர்‌; உற்று, அதனை நாடுறுதிர்‌; அதன்பின்னை, நனிநீர்ப்‌ பொன்னிச்‌ சேடு உறு தண்‌ புனல்‌ தெய்வத்‌ திருநதியின்‌ இரு கரையும்‌ தெரிதிர்‌ மாதோ. (கம்ப, கிட்கிந்தா நாடவிட்ட, 29) என்னும்‌ பாட்டில்‌ வெளிப்படுத்தியுள்ளார்‌. இந்திரசித்தன்‌ போர்க்களத்தில்‌ மாய்ந்தபோது தேவர்கள்‌ எல்லாரும்‌ களிப்பு மேலிட்டவர்களாய்‌, தாம்தாம்‌ உடுத்திருந்த ஆடைகளையே அவிழ்த்து மேல்நோக்கி வீசித்‌ துள்ளி ஆரவாரித்‌ தார்கள்‌ என்னும்‌ செய்தியைக்‌ *கம்பர்‌* சொல்ல வருகின்றுர்‌. ஆடையின்றி நின்ற அத்‌ தேவர்கள்‌ கொல்லாத விரதம்‌ மேற்‌ கொண்டொழுகும்‌ அருசசமயத்தவருடைய தெய்வங்களை யொத்தார்‌ என்று உவமித்துப்‌ பாடியிருந்தார்‌. வில்லாள ரானார்க்‌ கெல்லா மேலவன்‌ விளித லோடும்‌ செல்லாதவ்‌ விலங்கை வேந்தற்‌ கரசெனக்‌ களித்த தேவர்‌ 26 எல்லாருந்‌ தூசு நீக்கி யேறிட ஆர்த்த போது கொல்லாத விரதத்‌ தார்தம்‌ கடவுளர்‌ கூட்ட மொத்தார்‌ (கம்ப, யுத்த. இந்திர. வதை. 86) எனத்‌ தாம்‌ பாடிய இப்‌ பாடலைச்‌ சமணசங்கத்தார்க்குக்‌ காட்டி வாசித்தபோது அவர்கள்‌ எல்லாரும்‌ உளமகிழ்ந்தார்கள்‌ என்பது செவிவழியா கத்‌ தெரியவரும்‌ ஒரு செய்தியாகும்‌. திருநறுங்‌ கொண்டையில்‌ விளங்கிய வீரசங்கத்தைச்‌ சார்ந்த அறிஞர்‌ பெருமக்கள்‌ அருகசமய தவத்தோர்‌ வாழ்ந்த வெவ்வேறிடங்களுக்கும்‌ சென்று அறிவுக்கொடை வழங்க லாயினர்‌. இங்ஙனம்‌ வேறிடங்களுக்குச்‌ சென்றவர்களுள்‌ வீர நற்தியடிகள்‌ என்னும்‌ தவத்தவர்‌ வாழ்க்கை ஈண்டு நினைவு கூரத்தக்கதாகும்‌. இவர்‌ கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருச்சசணமலையில்‌ விளங்கிய பல்கலைக்‌ கழகத்திற்குச்‌ சென்று, அங்குள்ள முனிவர்‌ பெருமக்களுடன்‌ அரும்பொருள்‌ ஆய்ந்து தவம்புரியலாயினர்‌. அப்பொழுது அங்குள்ள மலையில்‌ ஜினர்சிலைகளை வடித்தமைக்க இவர்‌ முன்னின்ளர்‌. அன்றியும்‌ ஆண்டுள்ள சான்றோரின்‌ முயற்சியால்‌ திருநந்திக்கரைக்‌ குகைக்கோயில்‌ தோன்றுவதற்கும்‌ இவர்‌ தூண்டுகோலாயிருந் தார்‌. அக்‌ கோயில்‌ ஓர்‌ ஆற்றின்‌ கரையில்‌ அமைவதாயிற்று. வீர நந்தியடிகளின்‌ முயற்சியால்‌ ஆக்கப்பெற்ற அவ்விடத்திற்கு அங்குள்ள ஜைனப்‌ பெருமக்கள்‌ அவருடைய பெயரையே சூட்டலாயினர்‌. அதுமுதல்‌ அங்கு ஓடும்‌ ஆறு நந்தியாறு என்றும்‌, அதன்‌ கரையில்‌ அமைந்த குகைக்கோயில்‌ திரு நந்திக்கரைக்‌ கேரயில்‌ என்றும்‌ வழங்கப்படலாயின. இவ்‌ வரலாற்றுச்‌ செய்திகள்‌ திருச்சரணத்துப்‌ பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளால்‌ தெரியவருகின்றன , திருநறுங்‌ கொண்டை அப்பாண்டை நாதரின்‌ திருக்‌ கோயிலை மேலிற்பள்ளி (மேலைப்பள்ளி) என்றும்‌, சந்திரநாதர்‌ 2 திருக்கோயிலைக்‌ 'கீழைப்பள்ளி” என்றும்‌ சாசனங்கள்‌ குறிப்‌ பிடுகின்றன. இரண்டு பள்ளிகளுக்கும்‌ தனித்தனியாக மன்னர்‌ முதலியோர்‌ நிபற்தம்‌ வைத்த செய்திகளும்‌ இரண்டற்கும்‌ சேர்ந்து நிபந்தம்‌ விட்ட செய்திகளும்‌ சாசனங்களில்‌ காணப்‌ படுகின்றன!. ஸ்ரீ சந்திரநாதர்‌ “பாழியிலாழ்வார்‌” என்றும்‌ சாசனங்களில்‌ குறிக்கப்படுகிருர்‌ *. இத்‌ திருக்கோயில்‌ திருப்பணி முதன்முதல்‌ சோழர்‌ காலத்‌ தில்‌ தொடங்கப்பெற்றது. பாறைப்புடைப்புச்‌ சிற்பமாக விளங்‌ கிய அப்பாண்டை நாதரை மூலமூர்த்தியாகக்கொண்டு பாறை யுடன்‌ இணைத்து இக்‌ கோயில்‌ அமைக்கப்பட்டது. கோயிலில்‌ நித்திய நைமித்திகங்கள்‌ குறைவற நடைபெறச்‌ சோழர்‌, பாண்டியர்‌, விஜயநகரமன்னர்‌ முதலியோரும்‌ அவர்களுக் குட்‌ பட்ட வீரர்‌ முதலியோரும்‌ பல நிபந்தங்கக£ப்‌ பற்பல காலங்‌ களில்‌ ஏற்படுத்தியுள்ளனர்‌. முதல்‌ இராசராசன்‌, முதலாம்‌ இராசேந்திரன்‌, முதற்‌ குலோத்துங்க சோழன்‌ ஆகியோர்‌ இத்‌ திருக்கோயிலில்‌ நந்தா விளக்கெரிக்க நிபந்தம்விட்ட செய்திகள்‌ இங்குள்ள கல்வெட்டு களால்‌ தெரியவருகின்றன. 1. ந * மேலிற்பள்ளி2 (8.1. 1, 7௦1, 31ம்‌, 1013) 11 “ஞீ நறுங்கொண்டைக்‌ கீழைப்‌ பள்ளிக்கு கீழ்டீண்டகமும்‌ சதுர்முகத்‌ திருக்‌ கோயிலும்‌ செய்வித்தார்‌. ” (306 ௦£ 1939-40) 111 * திருநறுங்‌ கொண்டைக்‌ கீழைப்பள்ளி £ (5.1. 1. 1791. 91ம்‌, 1019 14 * இரண்டு களஞ்சுப்‌ பொன்‌ இரண்டு பள்ளிக்கும்‌” (307 ௦ 1939-40) 4. * இரண்டு பள்ளிக்கும்‌ பத்துப்‌ பொன்‌ கொடுத்தார்‌. 5 (308 ௦8 1939-40) 9ம்‌ * ஜீ திருநறுங்‌ கொண்டை இரண்டு பள்ளிக்கும்‌ ” (309 8 1939-40) 8. *திருநறுங்‌ கொண்டைத்‌ தேவர்‌ அப்பர்க்கும்‌ பாழியிலாழ்‌ வார்க்கும்‌ திருவமுர்து படிக்கு £ (317 8 1939-40) 28 இக்‌ கோயிலின்‌ கோபுரத்‌ திருப்பணி நிறைவேறிய செய்‌ தியை ஒரு சாசனம்‌ நமக்கு விளக்கமாக உரைக்கின்றது. * யுவ பங்குனி மீ” 2௨ துதியையும்‌ ரேவதி நட்சத்திரமும்‌ நாயற்று நானாள்‌ திருநறுங்கொண்டை அப்பாண்டார்‌ கோபுரம்‌ கல்‌ வேலை மட்டும்‌ பறமசிந தேவசீயர்‌ மேலைதேசம்‌ தீர்த்தவந்தனை பண்ணி இதுவே நிமந்தம்‌ ஆக கட்டடம்‌ முகிஞ்சது தர்மம்‌ சிந நாகள்ளூர்‌ சாத சேர்வை ௨?” (315 ௦11939-40) இச்‌ சாசனத்தால்‌ கோபுரத்தின்‌ கல்வேலை முடிந்த செய்தி புலனாகிறது. *பரமசிநதேவசீயர்‌ மேலைதேசம்‌ தீர்த்தவற்தனை பண்ணினார்‌” என்பது கோபுர வேலை முடிந்து மேலைப்பள்ளிக்‌ குக்‌ குட முழுக்‌ காட்டிய நிகழ்ச்சியைக்‌ குறிப்பதாகும்‌. தீர்த்ததிவந்தனை என்பது தீர்த்தங்கரர்‌ எழுந்தருளியுள்ள திருத்தலங்களுக்குத்‌ திவ்விய யாத்திரை செய்து வழிபடுதலை யும்‌ குறிக்கும்‌ போலும்‌. “கைக்கழ கேதென்னக்‌ கவளமுனி வர்க்கீதல்‌ மெய்க்கழ கேதென்று விளம்பினாள்‌--மிக்கசினன்‌ பாத மலரிற்‌ பணித லழகென்ருள்‌ பாதந்‌ தனக்கழகே பார்த்துரையாய்‌-- நீதமுடன்‌ தீர்த்ததி வந்தனையே சேர்ந்தவழ கென்றே போர்த்தகுயி லம்மொழியி னாரிருப்ப”-- (௮, உலா, 336-538) எனவரும்‌ அ௮ப்பாண்டை நாதர்‌ உலாப்‌ பகுதியில்‌ கால்களுக்கு அழகு தீர்த்ததிவந்தனை என்று குறிப்பது மேற்கூறிய செய்திக்குத்‌ தக்க சான்றாகும்‌. இன்னொரு சாசனம்‌ இக்கோயிலில்‌ தெற்கு நடைமாளிகை கட்டப்பட்ட செய்தியைக்‌ கூறுகிறது. 209 ₹₹திருநறுங்‌ கொண்டைத்‌ தெற்கில்‌ ஸ்ரீ கோயில்‌ திருநடை மாளிகை செய்வித்தான்‌ பாலையூர்ச்‌ சிங்கனேன்‌...... (313 மீ 1939-40) என்பதால்‌ அ௮ப்பாண்டார்‌ திருக்கோயிலிலே தெற்குத்‌ திருக்‌ கோயிலாகிய ஸ்ரீ சந்திரநாதர்‌ திருக்கோயிலுக்குத்‌ திருநடை மாளிகை செய்வித்தவன்‌ பாலையூர்ச்‌ சிங்கனாவன்‌ என்பது தெளி வுறத்‌ தெரிய வருகிறது. இராஜராஜ தேவரின்‌ 9ஆம்‌ ஆட்சியாண்டில்‌ கிளியூர்‌ மலையமான்‌ அத்தி சொக்கனணான ராஜகம்பீரச்‌ சேதிராயன்‌ திரு நறுங்கொண்டைத்‌ தேவர்‌ அப்பர்க்கும்‌ பாழியிலாழ்வார்க்கும்‌ திருவமுர்துபடிக்குச்‌ சில ஆயங்களை விட்டுக்‌ கொடுத்த செய்தி களை ஒரு சாசனம்‌ அறிவிக்கிறது. (317 ௦4 1939-40) இங்ஙனமாக இத்‌ திருக்கோயில்‌ தி ருப்பணிகளும்‌ தொடர்ந்து பல காலங்களில்‌ அரசர்‌ முதலியோர்களால்‌ செய்‌ விக்கப்பெற்று வந்தன. இதனால்‌ இத்‌ திருக்கோயிலின்‌ பெருஞ்‌ சிறப்புகளும்‌ வீளங்கக்‌ காணலாம்‌. திருநறுங்கொண்டையில்‌ நிகழும்‌ சிறப்பு விழாக்களுள்‌ வைகாசிப்‌ பெருவிழா குறிப்பிடத்தக்கது. அந்நாளில்‌ அப்‌ பாண்டைநாதர்‌ வீதியில்‌ உலா வருவார்‌. பெருமானின்‌ வீதி உலாப்‌ பவனியைத்‌ “திருமேற்றிசையந்தாதி”ப்‌ பாடல்‌ ஓன்று பின்வருமாறு எடுத்துக்‌ கூறுகிறது : “பெருகுந்‌ தவங்களி லென்செய்த வோபின்பு பேணித்‌ [தொண்ட ரருகுங்‌ குடதிசை வீரனுலாவர வுற்றமிர்து முருகுநீ ததும்புஞ்செந்‌ தாமரைமேன்‌ மொய்த்து முன்னும்‌ (பின்னு மருகும்‌ பிறிவறி யரவுடன்‌ சேவிக்கு மாடல்‌ வண்டட!? (திருமேற்றிசையந்தா தி, 70) 90 அப்பாண்டை நாதரின்‌ வீதித்‌ திருவுலாவையே சிறப்பாக த வருணித்துரைக்க எழுந்த உலாப்பிரபந்தத்தில்‌, இறைவ னுடைய திருவுலாக்‌ காட்சிகள்‌ அழகாகச்‌ சித்திரிக்கப்‌ பட்‌ டுள்ளன. பேரி, சங்கம்‌ முதலிய வாத்திய இசை முழங்க, கட்டியங்கூறுவார்‌ வருகைக்‌ கட்டியம்‌ உரைக்க, இந்திரவிமா னத்தில்‌ பெருமான்‌ எழுந்தருளி வருகின்‌. ஆலவட்டம்‌ , தூபக்குடம்‌ முதலிய சின்னங்கள்‌ தாங்கிவரப்‌ பல்லக்கில்‌ ஏறிக்‌ கோபுரவாயிற்படிகள்‌ பலவற்றையும்‌ கடந்து திருவீதிக்கு வரு கிருன்‌, திருவீதியலே அழகிய மணித்தேரின்மீது ஆரோ கணித்து, எல்லாத்திக்கிலும்‌ தொண்டர்குழாம்‌ போற்ற வீதியுலா வருகிறான்‌ . 1 * கோ மேதகமும்‌ கொழும்பெரன்‌ மிகவணிந்து மாமேரு வென்ன மணித்தேரின்‌--தாமேறி ஆயிரங்‌ கோடிகதிர்‌ ஆர்ந்த மணிவரை போற்‌ தூயதிசை விளங்கத்‌ தோன்றினான்‌ ” (௮. உலா.205-206) என்கிறார்‌ அனந்தவிசயர்‌, இறைவன்‌ எழுந்தருளி உலாவரும்‌ பல்லக்கு முதலியவற்‌ றிற்கு ஆகும்‌ செலவுகளுக்காக விடப்பட்ட திபந்தங்கள்‌ பற்றிய குறிப்பு ஒரு சாசனத்துள்‌ காணப்படுகிறது. அது வருமாறு ; “ ராஜராஜ வளநாட்டுத்‌ திருமுனைப்‌ பாடிக்‌ குன்றத்தூர்‌ நாட்டுத்‌ திருநறுங்‌ கொண்டையில்‌ வைகாசித்‌ திருநாளில்‌ திருவுத்ஸவம்‌ எழுந்தருளும்‌ அருமொழி தேவற்கும்‌ நித்திய கலியாண தேவற்கும்‌ திருப்பள்ளிச்‌ சிவிகைப்‌ புறமாக மலையன்‌ மல்லனான விக்கிரம சோழ மலையமான்‌ இத்திருநறுங்‌ கொண்டையில்‌ குந்தவை ஏரிக்கீழ்‌ உடைப்பின்‌ பாடு திருத்திவிட்ட நிலத்து...” (319 ௦1 1939-40) 1. உலர வெழுந்தருஎத்‌ திருவீதிக்கு வந்த வகையினை 179 முதல்‌ 206 வரையுள்ள கண்ணிகளில்‌ காணலாம்‌, 91 இச்‌ சாசனக்‌ குறிப்பினால்‌ வைகாசித்‌ திருவிழாவில்‌ அரு மொழி தேவரையும்‌ நித்திய கலியாண தேவரையும்‌ எழுந்தருளு வித்தற்கான பல்லக்கிற்குரிய நிபந்தம்‌ விடப்பட்ட செய்தி தெரியவரும்‌. திருநறுங்‌ கொண்டையிலுள்ள குந்தவைப்‌ பேரேரி ஒரு சமயம்‌ உடைப்பெடுத்துச்‌ சில நிலங்களைப்‌ பாழ்படுத்தி விட்டது. அவற்றைத்‌ திருத்திச்‌ சிவிகைப்‌ புறமாகத்‌ திருக்‌ கோயிலுக்கு மலையன்‌ மல்லனான விக்கிரம சோழ மலையமான்‌ நிபந்தம்‌ வைத்தான்‌ என்பது இதனால்‌ விளக்கமாகிறது. இப்பொழுதும்‌ இத்‌ திருக்கோயிலில்‌ ஆண்டுதோறும்‌ வைகாசி மாதத்தில்‌ ஆண்டுப்‌ பெருவிழா நடைபெற்று வருகிறது. வைகாசித்‌ திருநாளைப்‌ போலவே தைம்மாதம்‌ அத்தநாளி ஓம்‌ அப்பாண்டாரை எழுந்தருளப்‌ பண்ண வேண்டுமென்று இருங்கொளப்பாடி நாட்டுத்தவத்தாளன்‌ தேவர்‌ இராசாக்‌ கணாயன்‌ என்பார்க்குச்‌ சொன்னார்‌. அவ்வாறே அவன்‌ தன்‌ பெயரால்‌ “இராசாக்கணாயன்‌ திருநாள்‌” என்று தைம்மாதம்‌ அத்தத்திலே நிகழ்த்தும்படி ஏற்பாடு செய்தான்‌. அதற்காக நாயனாரின்‌ இறையிலி நிலத்துப்‌ பயிரேருமற்‌ கிடந்த நிலங்களைப்‌ பயிர்செய்து கொடுத்துத்‌ தைமாத அத்தத்‌ திருவிழா எழுந்தருள வகை செய்தான்‌, £ 1. ** திருநறுங்‌ கொண்டை நாற்பத்தெண்ணாயிரப்‌ பெரும்பள்ளித்‌ தானத்தாற்குத்‌ தங்களூர்‌ நாயனார்‌ அப்பாண்டார்க்கு முன்பிலாண்டு எழுந்‌ தருஞூகிற வைகாசித்‌ திருநாரூடனே நம்‌ பேராலேயும்‌ ஒரு திருநாள்‌ எழுந்தருள வேணுமென்று இருங்கொளப்பாடி நாட்டுத்‌ தவத்தாளன்‌ தவர்‌ சொல்லுகையில்‌ இதுக்கு உடலாக இவ்வூரில்‌ நான்‌ கெல்லைக்கு உட்பட்ட எல்லைக்குள்‌ முன்பு இந்‌ நாயனாருக்கு இறையிலியான நிலத்தில்‌ பயிரேருமற்‌ கிடந்த நிலமும்‌ குடுத்துப்‌ பயிர்‌ செய்து கொல்லி ஏந்தல்‌ உட்பட புறவுடன்‌ முன்பு நாலாவது கண்டு கொண்டு ஆருவது முதல்‌ நம்‌ பேராலே இராசரக்‌ கணாயன்‌ திருநாளென்று தைம்மாதத்து அத்தத்திலே தித்தமரகத்‌ திருநாள்‌ எழுந்தருளுவிப்பதாகச்‌ சொன்ேம்‌........ ?? (௨.1.1. வரா 10/4) 92 குவிகை கொண் டி.ந்திரநர பதிகடம்‌ பெண்களொடு குறுகவெம்‌ பந்த வினைவென்‌் ழவிகை கொண்‌ டம்பொனெயி லதனினொண்‌ பிண்டி நிழ லமருநஞ்‌ சம்ப வனிடம்‌ கவிகையந்‌ தொங்‌ கனிரை கவரிமுந்‌ துங்‌ கொடிக ளனகர்தம்‌ பஞ்ச தரளச்‌ சிவிகையன்‌ புந்திரு விழவொடெங்‌ கெங்குமிகு திருநறுங்‌ கொண்டை மலையே! £ என இங்கு நடைபெறும்‌ வீ£வினைச்‌ சிறப்பித்துத்‌ திரு நறுங்‌ கொண்டை மலைப்‌ பதிகப்பாடல்‌ ஒன்றும்‌ (5) போற்றியுரைக்‌ கின்றது. திரிபுவனச்‌ சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானான விக்கிரம பாண்டியன்‌ காலத்துப்‌ பொறிக்கப்பெற்ற ஒரு கல்வெட்டு இத்‌ திருக்கோயிலுக்குரிய பணிகளைப்‌ புரிவார்க்கு நிபந்தம்‌ வைத்த செய்தியை உரைக்கின்றது. கோயிற்கு டவண்டும்‌ பணிபரிவாரை “அமண்பிடாரர்‌? என்று இச்‌ சாசனம்‌ குறிப்பிடுகிறது. “ஸு ஸி ன்‌ டு ல்ல வ த ஸ்ரீ திரி புவனச்‌ சக்கரவர்த்சி கோ நேரின்மை கொண்டான்‌ கூகிலிலாடற்‌ பாடி வானவன்‌ மாதேவி புரத்தொடும்‌ கூடினபடியே வேறு இருக்கிற சிறு சாத்தநல்லூர்‌ ஊரார்க்கு ராஜராஜவள நாட்டுக்‌ குன்‌ றத்தூர்‌ நாட்டுத்திருநறுங்‌ கொண்டைப்‌ பள்ளிக்கு வேண்டும்‌ நிபந்தங்‌ களுக்கும்‌ அமண்பிடாரர்களுக்கும்‌ இறுப்பாகத்‌ தங்களூர்‌ நீர்‌ நிலத்திலே ஓரு பக்கமடைய நிலம்‌ பதிற்று வெலிக்கு மூன்றாவது முதல்‌ வெலி ஒன்று 2க்கு நெல்லு இருபதின்‌ கலமாக இறைகட்டின நெல்லு இருநூற்றுக்‌ கலத்தினால்‌ எண் கலப்‌ பிடிபாடை இருபத்தைஞ்சு யாண்டு மூன்றாவது முதல்‌ பள்ளிச்‌ சந்த இறையிலியாக இட்டு 88 வரியிலாரும்‌ வரிக்குக்‌ கூறு செய்வார்களும்‌ எழுத்திட்ட உள்வரி பொதக காட்டுச்‌ சொன்‌ னோம்‌ இந்நிலத்துக்கு அமண்பிடபர்கள்‌ சொன்ன படி செய்வது......இவர்கள்‌ வசம்‌ கடமை இறுக்கு...... (5. 5.1, 4௦1 917, 1912) இதிலிருந்து கோயில்‌ நிலங்களைப்‌ பரிபாலித்துத்‌ திருக்‌ கோயிலுக்குரிய பூசை முதலியவற்றையும்‌ பிறஉற்றையும்‌ குறை வற நடத்திவந்த கோயில்‌ திருட்பணியாளர்களே இவ்‌ அமண்‌ பிடாரர்கள்‌ எனத்‌ துணியலாம்‌. திருக்கோயில்‌ ஏவல்தொழில்‌, சமையல்‌ தொழில்‌ செய்வோரைக குறிப்பிடும்‌ “பரிசாரகர்‌? என்பது *பிடாரர்‌” எனத்‌ திரிந்ததோ என்றும்‌ நினைக்க இட முண்டு, ஏவல்‌ செய்வோரைக்‌ குறிக்கவரும்‌ “படம்‌” என்னும்‌ சொல்‌, பிடாரர்‌ எனக்‌ கால கதியில்‌ மாறி வழங்கியிருத்தல்‌ கூடும்‌ என்றும்‌ தோவறுகிறது. திருநறுங்‌ கொண்டையின்‌ அண்மையிலுள்ள சில ஊர்‌ கப்‌ பற்றிய குறிப்புகளும்‌ கல்வெட்டுகளால்‌ தெரியவரு கின்றன. ஆற்றூர்‌,” ஏனாதிமங்கலம்‌,” சிறுசாத்த நல்லூர்‌, * ஆதனூர்‌, * செம்பூர்‌,” பழம்பட்டணம்‌,£ குன்றத்தூர்‌,” நரியப்‌ பாடி,” சினதாகள்ளூர்‌,” இவற்றுள்‌ ஆற்றூர்‌ என்பது ஆறை? எனவும்‌ மரூ௨வழக்காய்‌ எடுத்தா ளப்பட்டிருக்கிறது. கொண்டை சினாலயத்தை நடுநாயகமாகக்‌ கொண்டு தொண்டை. நாட்டில்‌ சினாலயங்கள்‌ பல சூழ்ந்து விளங்குவதை அப்பாண்டைநாதர்‌ உலாவில்‌ அனந்தவிசயர்‌ அழகுற எடுத்துக்‌ காட்டியுள்ளார்‌. * 1. 5.7.1. 01.11, 1011, 1015 6. 303௦ 1939-40 2. 5.7.7. ௦ ௫1, 1011 7. 303 ௦ 1839-40 3. 5.7.7. 701. ௫11, 1012 8. 306, 309 ௦7 1939-40 4. 303 ௦8 1939-40 9. 315 ம 1939-40 5. 303 ௦ 1939-40 10. 320 ௦1 1939-40 11. ௮. உலர்‌. கண்ணி 86-94. 84 *தொண்டைவள நாட்டில்‌ துலங்கும்‌ புகழ்வீறும்‌ கொண்டை சினாலயமே கூறுவாம்‌-வண்டமிழ்சேர்‌ மஞ்ஜைக்‌ குளத்தூர்‌ மரக்குண்ணம்‌ மாமுதலூர்‌ செஞ்சிநகர்‌ தாசைத்‌ திருக்குழசை-விஞ்சுபுகழ்‌ வங்காரம்‌ பொன்னூர்‌ வளத்திக்‌ குறக்கோட்டை சிங்கபுரி வீரைத்‌ திருப்பரம்பை- தங்குபுகழ்‌ ஆடையூர்‌ கன்னலமோ டாலைப்‌ பதிகூனம்‌ பாடிவிரு தூர்தச்சாம்‌ பாடியெயில்‌- நீடுபுகழ்‌ வீடை நகர்‌ குளந்தை வேலூர்‌ வயலையுடன்‌ பீடு பெறுவிழுக்கம்‌ பேருவூர்‌- நீடியசீர்‌ வாழைப்‌ பதியகலூர்‌ வண்மை வளர்திறக்கோல்‌ கீழ்க்‌ ககாயூர்‌ கிரியருலகை-வாழியநற்‌ சண்பை நகர்‌ தச்சூர்‌ சயலையூர்‌ பூண்டியுடன்‌ வெண்குண மோதல்பாடி வில்விளந்தை-பண்பாம்‌ அருகந்த மங்கலமோ டான திருத்‌ தீபை வருவிளங்‌ காடுசேந்த மங்கலமும்‌- அருகியலாம்‌ அண்டர்‌ முனி வோர்கடொழும்‌ ஆலயமே சூழ்ந்தநறுங்‌ கொண்டை நகர்‌ தழைக்கக்‌ கூறுவாம்‌”. (௮, உலா. 86-94) 1. மஞ்ைக்குளத்தூர்‌ மரக்குண்ணம்‌ (மா) முதலூர்‌ செஞ்சிநகர்‌ தாசை (திருக்‌) குழலச (வங்காரம்‌) பொன்னூர்‌ வளத்தி குறக்கோட்டை சிங்கபுரி வீரை திருப்பரட்பை ஆடையூர்‌ கன்னலமோடு ஆலைப்பதி கூனம்‌ (போடி) விருதூர்‌ தச்சாம்பாடி வீடைநகர்‌ குளந்தை வேலூர்‌ வயலை விழுக்கம்‌ பேருவூர்‌ வாழைப்பதி அகலூர்‌ 85 திறக்கோல்‌ கீழ்க்களையூர்‌ கிரியதுகை சண்பைநகர்‌ தச்சூர்‌ சயலையூர்‌ பூண்டி வெண்குளம்‌ ஓதல்பாடி விளந்தை அருகந்தமங்கலம்‌ திருத்திபை விளங்காடு சேந்தமங்கலம்‌ இவ்வுலாவாசிரியர்‌ எடுத்துக்காட்டிய திருத்தல வரிசை யில்‌ “திருத்தீபை? என்னும்‌ தலமொன்றும்‌ சுட்டப்படுகிறது. இங்குக்‌ குறித்த *தீபை? எது என்பதும்‌ எந்தப்‌ பெயரின்‌ சுருக்கமாக இஃது அமைந்துள்ளது என்பதும்‌ சிந்தித்தற்‌ குரியது. “தீபை? என்பது தீபங்குடி அல்லது தீபனூர்‌ என்பதன்‌ மரூ௨ வழக்காதல்‌ கூடும்‌. “தீ பங் குடி” என்ற பெயர்‌ கொண்ட ஊர்கள்‌ திருவாரூர்ப்‌ பக்கத்தும்‌ திண்டிவனப்‌ பக்கத்‌ தும்‌ உள்ளன? என்று எழுதுகிறார்‌ பேராசிரியர்‌ மு, இராகவை யங்கார்‌.” தீபங்குடிப்பத்து” என்னும்‌ துதிப்பதிகம்‌ ஓன்றும்‌ கிடைத்துள்ளது. இதில்‌ வரும்‌ மூன்றாம்‌ பாட்டுத்‌ தமிழ்‌ நாவலர்‌ சரிதையில்‌, *“செயங்‌ கொண்டாரை அபயன்‌ உமதூர்‌ யாது என்று கேட்டபோது சொன்ன கவி?” யாகத்‌ தரப்பட்டிருக்கிறது அது வருமாறு :! “செய்யும்‌ வினையு மிருளுண்‌ பதுவுந் தேனுந்‌ நறவும்‌ ஊனுங்‌ களவும்‌ பொய்யுங்‌ கொலையும்மறமுந்‌ தவிரப்‌ பொய்தீர்‌ அறநூல்‌ செய்தார்‌ தமதூர்‌ கையும்‌ முகமு மிதழும்‌ விழியுங்‌ காலுந்‌ நிறமும்‌ போலுங்‌ கமலம்‌ கொய்யும்‌ மடவார்‌ கனிவா யதரம்‌ கோபங்‌ கமழும்‌ தீபங்‌ குடியே,” (பெருந்தொகை, 180) 1. பெருந்தொகை, பாட்டு 180, வீசேடக்குறிப்பு, பக்கம்‌ 5894-ல்‌ அடிக்கு றிப்பாக, ** *தீபங்குடிப்பத்து” என்னும்‌ பதிகத்தின்‌ பிரதியொன்று *ஜைன-கெஸட்‌.? பத்திரா திபரான ஸரீ ஸி. எல்‌. மல்லிநாதன்‌ அவர்களால்‌ அன்புடன்‌ எனக்கு அளிக்கப்பெற்றது??--ஏன்று தெரிவித்துள்ளார்‌. 86 தொண்டை வளநாட்டில்‌ திருநறுங்கொண்டையைச்‌ சூழ வுள்ள தலங்களுள்‌ ஓன்றுகக்‌ குறிக்கப்படும்‌ “திருத்தீபை” திண்டிவனத்தின்‌ பக்கத்தில்‌ உள்ள தீபங்குடியாதல்‌ வேண்டும்‌ என்று கொள்ளலாம்‌. ” தீபை என்பது திருநறுங்கொண்டையை அடுத்து மிக அண்மையில்‌ உள்ளதா, அல்லது இவ்வூருக்கே திருத்தீபை என்னும்‌ பெயர்‌ உண்டா என்னும்‌ ஐயத்தைத்‌ *திருமேற்றிசை யந்தாதி” என்னும்‌ நூல்‌ தோற்றுவிக்கிறது. *திருமேற்றிசை என்பது திருநறுங்கொண்டை ஆலயத்‌ தின்‌ பிறிதொரு பெயராகும்‌. பச்சைரத்தினம்போல்‌ விளங்‌ கும்‌ பார்சுவநாதராகிய அப்பாண்டைநாதர்‌ மேற்குத்திசை தோக்கி எழுந்தருளியிருக்கிறார்‌. எனவே, அவர்‌ விளங்கும்‌ திருக்கோயில்‌ திருமேற்றிசை என்னும்‌ சிறப்புப்பெயர்‌ பெறுவ தாயிற்று இதுபோன்றே பரம்பை என்னும்‌ பறம்பாபுரியிலுள்ள பார்சுவநாதர்‌ திருக்கோயிலும்‌ மேற்கு நோக்கிய சன்னிதி யுடையது. ஆதலால்‌, அவ்வூரையும்‌ “திருமேற்றிசை? என அழைப்பதும்‌ இங்கு ஒப்பு நோக்கத்தகும்‌. *திருமேற்றிசைப்‌ பத்து? என்னும்‌ பதிகப்‌ பாமாலை ஒன்றும்‌ அவ்வூருக்கு உள்ளது.” 1] திண்டிவனத்தின்‌ பக்கத்தில்‌ தீபங்குடி என்னும்‌ ஊர்‌ இப்பொழுது அதே பெயரால்‌ வழங்குவதாகத்‌ தெரியவில்லை. “தீவனூர்‌”? என வழங்கும்‌ ஊர்‌ ஒன்று உளது, “தீபங்குடி” என்பது இவ்வாறு பெயர்‌ மாறியதா அல்லது அதே பெயரில்‌ பிறிரிதாரு ஊர்‌ உளதா என்பது ஆராய்தற்குரியது . 2... திருநறுங்குன்றம்‌ அப்பாண்டைநாதர்‌ தோத்திரத்திரட்டு பக்‌. 57-60. 81 திருமேற்றிசையந்தாதியின்‌ காப்புச்‌ செய்யுள்‌ பெருமான்‌ நறுங்கொண்டையைப்‌ போற்றுகிறது. திருநறுங்கொண்டைத்‌ திருமலையைப்‌, *பாழிவெற்பு?? எனவும்‌, *திருப்பாழி:” ₹பாழி:8 எனவும்‌, “வடபாழி₹4 எனவும்‌ இந்த அந்தாதிப்‌ பிர பந்தம்‌ குறிப்பிடுகிறது. பாழி என்பது செய்தவத்தோர்‌ மேவும்‌ இடத்தையும்‌ அருகன்‌ திருக்கோயிலையும்‌ குறிக்கும்‌. திருநறுங்கொண்டை மலையில்‌ சினநாதரும்‌ செய்தவத்தோரும்‌ இருக்கும்‌ காரணத்தால்‌ இம்‌ மலையைப்‌ ₹பாழி? என இவ்‌ வாசிரியர்‌ போற்றுவது பொருத்தமுடைத்தா கும்‌. இங்கே பச்சை ரத்தினமாம்‌ மரகதம்போலும்‌ பச்சை வண்ணராம்‌ பார்சுவநாதர்‌ -- அப்பாண்டைநாதர்‌ -- மேற்குத்‌ திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில்‌ காட்சி தருகிறார்‌. “குடதிசை நோக்கி மரகத மாமணிக்‌ குன்றமொன்று வடதிசை மேருவில்‌ நின்றது போல்வட பாழியி லெம்‌ இடர்திசை நீங்க நின்றார்‌? “குடக்கே திசை நோல்‌ களிக்கின்ற நாதர்‌? £ என்றெல்லாம்‌ போற்றுகிறார்‌ திருமேற்றிசையந்தாதியுடையார்‌. “- வடபாழி என்னும்‌ பொற்குன்றின்‌ மீது குடபால்‌ முகஞ்செய்து பூமிசையே நிற்கின்ற கோல மணிக்குன்‌ றெனக்கின்று நேர்பட்டதே?7* என்னும்‌ அந்தாதிப்‌ பாட்டு மேற்றிசை நோக்கி அப்பாண்டை, நாதர்‌ நிற்கும்‌ திருக்கோலத்தை நன்கு எடுத்துக்காட்டுகிறது. 1. திருமேற்‌. அந்‌ 71, 94 8. ரே, 88 ௨. ஷூ, 1, 98, 59, 74 95 6. ந, கம்‌ 8 ஷ, 47 3. ஷி, 48 4, டெ, 8,5, 81. 80, 86, 98, 89, 45, 64, 66, 79, 81, 96, 97. 99 மேற்குத்‌ திக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும்‌ காரணத்‌ தால்‌ அப்பாண்டைநாதர்‌, மமற்றிை சயர்ன்‌ " குடதிக்கு நின்ரூர்‌* குடதிசையாய்‌? என்று இவ்வாறு திசைப்பெயரான்‌ அழைக்கப்‌ பெறுகிறார்‌. மேற்றிசை வீரன்‌ 4 மேற்றிசை விண்ணவன்‌ £ திருமேற்றிசைக்‌ கொண்டல்‌? மேற்றிசைச்‌ செல்வன்‌ £ என்று இவ்வாறு பல்வேறு வகையாகத்‌ திருமேற்றிசையந்தாதி யில்‌ மேற்றிசை, குடதிசை என்பன குறிக்கப்பட்டுள்ளன. ஆகவே, திருமேற்றிசை என்பது திருநறுங்கொண்டைத்‌ திருத்‌ தலத்தின்‌ சிறப்புப்‌ பெயர்‌ என்பது தெளிவு. திருமேற்றிசையைக்‌ குறிக்கும்பொழுது இவ்வந்தாதிப்‌ பாடல்கள்‌ :திருத்தீபையுள்‌ டூமற்றிசை? எனச்‌ சிறப்பித்துப்‌ பேசுகின்றன : “தேவும்‌ புகழ்ந்தமை யாத்திருந்‌ தீபையிற்‌ செய்தவத்தோர்‌ மேவுந்‌ திருப்பா ழியிற்றிரு மேற்றிசை வீரனை?” தீயையின்‌ மேற்றிசை விண்ணவனே?? தீபையுள்‌ மேற்றிசையான்‌ ?1௦ * திருத்தீபைக்‌ குடதிசைக்கே? 11 * திருத்‌ தீபையிற்‌ நிருமேற்றிசைச்‌ செல்வன்‌ 313 * வரந்தரு தீபையுள்‌ மேற்றிசையானை 518 * திருத்தீபைக்‌ குடதிசைக்கே நின்றான்‌ 5154 * மேற்றிசைச்‌ செல்வனை மல்லலந்‌ தீபையென்னுமூரனை? 1 5 1. திரு6மற்‌. அந்‌. 28, 46 9. டெ,£ டே ஜே, 860, 89 10. டே, 48 8, நே, 10, 42 11. ஷி, 87 க, நே, 1 18. ரே, 88 ட ஷே, 8 18. நே, 100 6. ஷே, 80 14. றே, 75 7. ஜே, 78,886 15, நே, 7£ 8. திருமேற்‌. அந்‌. 1 89 இவ்வாருகப்‌ பல பாடல்களிலும்‌ “தீபை? என்னும்‌ ஊரில்‌ மேற்றிசை நோக்கி நின்று அருள்சுரக்கும்‌ கொண்டலாக அப்‌ பாண்டை நாதரைத்‌ துதித்துப்‌ போற்றுகிறார்‌ திருமேற்றிசை யந்தாதியுடையார்‌, எனவே, *தீபை? என்பது திருநறுங்‌ கொண்டை நகரின்‌ மற்றொரு பெயராதல்‌ வேண்டும்‌ என்பது போதரும்‌, “கொண்டைமலை? என அப்பாண்டை நாதர்‌ உலாமாலை மலைக்கும்‌ பெயராகச்‌ சுட்டுதலால்‌ கொண்டை மலைசார்‌ ஊரும்‌ “கொண்டை”? என்னும்‌ காரணச்‌ சிறப்புப்‌ பெயரை நாளடை வில்‌ பெற்றது இயல்பே. மலைத்திருக்‌ கோயிலின்‌ சிறப்பால்‌ திருநறுங்‌ கொண்டை என்னும்‌ பெயர்‌ சிறந்து மமேலோங்கத்‌ “திருத்தீபை? என்னும்‌ பெயர்‌ வழக்குக்‌ குறைந்தது போலும்‌! திருமேற்றிசை யந்தாதி நூலின்‌ 21 பாடல்களை *நதல்லறம்‌* திங்கள்‌ வெளியீட்டில்‌, (மலர்‌ 8, இதழ்‌ 3, 15--8--1960 பக்‌. 28-24; மலர்‌ 8, இதழ்‌ 6, 15--6--.1960, பக்‌, 2-8) வெளி . யிட்ட மயிலை சீனி, வேங்கடசாமி அவர்கள்‌ *திருமேற்றிசை? என்னும்‌ ஊர்பற்றிக்‌ கூறிய கருத்தும்‌ கருதற்பாலது. அவர்கள்‌ தரும்‌ விளக்கம்‌ வருமாறு : “* திருமேற்றிசை என்னும்‌ திருப்பதியில்‌ எழுந்தருளியுள்ள அருகப்‌ பெருமான்மீது அந்தாதித்‌ தொடையாக அமைக்கப்பட்ட நூல்‌ இது. காப்புச்‌ செய்யுளேத்‌ தவிர 401 செய்யுசையுடையது. திருமேற்றிசை என்பது திரு நறுங்‌ கொண்டை என்னும்‌ ஊர்‌, இதனை “நறுங்‌ கொண்டை என்ன வல்லார்க்‌ இல்லை 6பரிடடர” என்று இந்நூலில்‌ கூறுவதனால்‌ உணரலாம்‌. திருநறுங்கொண் டையாகிய திருமேற்றிசை தீபங்குடிக்கு மேற்கில்‌ உள்ளது என்று அறிகிறோம்‌. *திருத்திபையின்‌ டூமற்‌ றிசை விண்ணவன்‌? என்றும்‌ “திருத்தீபைக்‌ குட / 40 திசைக்கே நின்ளுன்‌? என்றும்‌, “வரந்தரு தீபையுள்‌ மேற்‌ றிசையான்‌ ?: என்றும்‌ இந்‌ நூலுள்‌ கூறப்படுவதால்‌ இதனை அறியலாம்‌, ?? இங்கே தீபங்குடிக்கு மேற்கிலிருப்பதால்‌ திருநறுங்‌ கொண்டை என்பது திருமேற்றிசை எனப்பட்டது என்பது மேலும்‌ தக்க சான்றுகளுடன்‌ நிறுவப்பட வேண்டும்‌. தஞ்சை மாவட்டத்துத்‌ திருவாரூர்ப்‌ பக்கத்துத்‌ தீபங்குடிக்கு இத்தலம்‌ மேலைத்திசையில்‌ உள்ளது என்று சொல்வது பொருந்துமா என்பது சிந்தனை க்‌ குரியது. அப்பாண்டை. நாதர்‌ உலா தொண்டை நாட்டிலே சின லயமுள்ள ஊர்களுள்‌ ஒன்றாக *திருத்தீபை” (௮, உலா, 98) என்னும்‌ ஊரைச்‌ சுட்டுகிறது, திண்டிவனத்திற்குப்‌ பக்கத்தில்‌ ஒரு தீபங்குடி உள்ளது எனப்‌ டூபரா £ சிரியர்‌ மு. இராகவையங்கார்‌ தெரிவித்துள்ளார்‌. ஒருகால்‌ இந்தத்தீபங்‌ குடியைக்‌ குறித்துக்‌ கூறியதாகுமா? அதுவும்‌ திருநறுங்‌ கொண்டைக்கு நேர்கிழக்காக உள்ள ஊராக ஆகமாட்டாது. மேலும்‌, திருமேற்றிசை யந்தாதியில்‌ பெரும்பான்மைப்‌ பாடல்களும்‌ ஏழாம்‌ வேற்றுமை உருபு சுட்டியே 'தீபை? என்பது குறிக்கப்படுகிறது. தீபையின்‌ மேற்கு உள்ளது என்னும்‌ எல்லை குறிக்கும்‌ கருத்தினர்‌ ஆசிரியராயின்‌ எல்லைப்‌ பொருள்‌ சுட்டும்‌ இன்னும்‌ இல்லும்‌ உருபுகளைப்‌ பயன்படுத்தி யிருக்க வேண்டும்‌. அவ்வாறு எல்லைப்‌ பொருள்‌ தரும்‌ உருபு கள்‌ இன்றி இடப்பொருள்‌ தரும்‌ உள்‌, இல்‌ என்னும்‌ உருபுகளா லேயே கவிஞர்‌ குறிப்பிடுகிறார்‌, எனேவ, *“திருத்தீபையுள்‌ மேற்றிசையான்‌” என்றால்‌ திருத்தீபை ஊராகிய திருநறுங்‌ கொண்டையில்‌ மேற்குத்‌ திருமுக மண்டலம்‌ காட்சிதந்து நிற்பவன்‌ என்பதுவே இயல்பாக அமையும்‌ பொருளாகிறது. திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுடைய முகப்புக்‌ குறிப்பில்‌, *காப்புச்‌ செய்யுளைத்‌ தவிர 101 செய்யுளை 4] யுடையது”? என்பது *காப்புச்‌ செய்யுளைத்‌ தவிர 100 செய்யுளை யுடையது? என்று இருத்தல்‌ வேண்டும்‌, ஏனைய நூற்றந்தாதி களோடு ஒப்பக்‌ காப்புச்‌ செய்யுளைத்‌ தவிர்த்து நாறுபாடல்கள்‌ அதந்தாதியாக மண்டலித்து அமைந்துள்ளது. இத்‌ திருமேற்‌ றிசையந்தாதி ஒரு கலித்துறை நூற்றந்தாதி, அதாவது நால்‌ முற்றும்‌ கட்டாக்‌ கலித்துறைச்‌ செய்யுளால்‌ இயன்றுள்ளது. திருமேற்றிசைச்‌ செல்வராம்‌ அப்பாண்டை நாதர்‌ செந்‌ தாமரை மலர்மேல்‌ பச்சைமலைபோல்‌ நின்று, ஞானவாளினை புடையராய்‌, திசையாடை கொண்டவராய்‌, அணிதலம்‌ எதுவும்‌ அணியாது அழகியராய்‌, ஐந்தலை நாகம்‌ தன்‌ படங்க ளால்‌ நிழல்‌ செய்ய, மேலே முக்குடை விளங்கக்‌ காட்சி தருகி ரர்‌. இத்‌ திருக்காட்சியைத்‌ திருமேற்றிசை யந்தாதியுடை யாரும்‌ பிறரும்‌ புகழ்ந்து. பாடும்‌ திருப்புகழ்‌ மாலைகள்‌ கற்பார்‌ கேட்பார்‌ உள்ளங்களையெல்லாம்‌ பத்தி ஞானங்களால்‌ நிறை வுறச்‌ செய்வனவாம்‌. “ திருவளர்‌ தீபைத்‌ திருப்பாழி யிற்றிரு மேற்றிசைக்கே யுருவளர்‌ பச்சை மலையொன்றுமே :?1 ்‌ நடைமன்‌ னுதீபை வடபாழி யுணின்ற ஞானவொள்வாட்‌ படைமன்‌ னவரையல்‌ லானினி யாரையும்‌ பாடலமே :?3 * தியான வொள்வாள்‌ கொண்டு வென்‌ ரர்‌ *8 “ வனைதரு முக்குடை திக்குடை யாடை மணியுரகப்‌ புன்தரு பந்தர்ப்‌ பணமுடையார்‌ மன்னு பொன்னகரே 54 1. திருமேற்‌ அந்‌ 92, 8. நே, 59 8௨ ரெ, 99 4. ஸூ, 09 42 கூ கி து. ௩4 ௫ க ட ௩ *பச்சைப்‌ பிரானுலகை முற்றுடை யானொளி மூன்றுடை யான்றிசை நான்கு மன்றி மற்றுடை யாடையில்‌ லாவென்னை யாளுடை வானவனே 51 --'வடபாழி என்னும்‌ பொற்குன்றின்‌ மீது குடபால்‌ முகஞ்செய்து பூமிசையே நிற்கின்ற கோல மணிக்குன்‌ மெனக்கின்று நேர்பட்டதே/ ? ? ்‌ தொகுமதி முக்குடைக்‌ கீழே விரிபணச்‌ சுந்தரர்‌ 58 * படவர வின்குளிர்ப்‌ பந்தரின்‌ கீழ்ப்‌ பச்சை மேகன்‌ நின்ற வடவரை போல்வட பாழி 54 6 “ கற்றோர்‌ புகழுந்‌ திருத்‌ தீபை யுட்பணக்‌ காவணத்தார்‌ பொற்றா மரையி லுலாவருந் தாமரைப்‌ போது கண்டே? 8 -* ஐந்தலைப்‌ பாம்பு மசோகினம்‌ பொற்‌ பணையுங்‌ கவிப்ப நிற்கும்‌ பரஞ்சோதிப்‌ பதயுகமே ? * திருமேற்‌ அந்‌ 68 9. நெ, நேடி 48 6 ஆ, ஷ்‌, 14 7. ரே, ஷ்‌, £7 48 அணியா வணிகலத்‌ தெம்‌ பெருமான்‌ 35 84 51 60 * பருமணி டவயும்‌ பணப்பநீ தரிற்‌ பச்சை மாமுகில்‌ நின்‌ றருண்‌ மழை நாளுந்‌ தரவல்ல தேதன்‌ னடி யவர்க்கு :” * வீரனை மும்மதி வேந்தனை ஒேவரியந்‌ தாமரைப்‌ பூத்‌ தேரனை மேற்றிசைச்‌ செல்வனை மல்‌உலந்‌ தீபையென்னு மூரனை பயூரும்‌ பெயருமில்‌ லானையோ ராயிரத்‌ தெண்‌ பேரனை யெத்திறத்‌ தானென்று நாஞ்சில பேசுவதே/ * * இவ்வாருக எத்தனை எத்தனையோ வகைகளில்‌ திருமேற்‌ நிசைச்‌ செல்வராம்‌ அப்பாண்டை நாதரைக்‌ கவிஞர்‌ போற்றிப்‌ புகழுகின்றார்‌. அவற்றை நாம்‌ படிக்கும்‌ போதும்‌ கேட்கும்‌ போதும்‌ அப்பெருமானின்‌ திருவுருவம்‌ நம்‌ அகக்‌ கண்ணிற்கு மட்டுமன்றி ஊனக்‌ கண்ணிற்கும்‌ உருவெளியாய்த்‌ தோற்ற மளிக்கும்‌, “அப்பாண்ட நாதர்‌ உலா: நூலுள்ளும்‌ பல இடங்களில்‌ பாரீசநாதப்‌ பரம்பொருளின்‌ திருவுருவக்‌ காட்சி வருணனையும்‌ அவர்தம்‌ திருப்புகழ்களும்‌ செறிந்து மிளிர்தலைக்‌ காணலாம்‌. £ 1. நே, 69 8 ஜே, 7£ 8. நாதரின்‌ திருமேனி வருணனை, ௮. உலா. 168-178 தேவாதி தேவன்‌ திருப்புகழ்‌, அ, உலா, 1-12 44 திருநறுங்கொண்டையைப்‌ பற்றிய தமிழ்‌ நால்கள்‌ 1. அப்பாண்டை நாதர்‌ உலா-- அனந்த விசயர்‌ அருளிச்செய்தது. “. திருமேற்றிசை யந்தாதி-- ஆசிரியர்‌ பெயர்‌ அறியக்‌ கூடவில்லை. 2. ஜிநேந்திர ஞானத்‌ திருப்புகழ்‌ 4. தோத்திரத்‌ திரட்டு - ்‌. ர. ரர்‌: 97, நரர்‌, 9777. ந திருநறுங்‌ கொண்டை மலையின்‌ பேரில்‌ பதிகம்‌ 5 திருநறுங்‌ கொண்டை அப்பாண்டை நாதர்‌ பேரில்‌ அப்பர்‌ பாடிய பதிகம்‌ 7 திருநறுங்‌ கொண்டை அப்பாண்டை நாதர்‌ பேரில்‌ சம்பந்தர்‌ பாடிய பதிகம்‌ 9 ்‌ திருநறுங்‌ கொண்டை அப்பாண்டை நாதர்‌ பேரில்‌ கட்டளைக்‌ கலித்துறை 12 திருநறுங்கொண்டை மகாசாத்தய்யா பேரில்‌ பதிகம்‌ 18 திருநறுங்‌ கொண்டை மஹா சாத்தய்யா பேரில்‌ கட்டளைக்‌ கலித்துறை 16 பாரீஸ்வ நாதர்‌ பேரில்‌ சரணப்‌ பதிகம்‌ 44 சரணப்‌ பத்தும்‌ பதிகம்‌ 47 பணவரங்கப்‌ பத்து 68 அப்பாண்டை நாதர்‌ உலாநாூல்‌ குறிப்பிடும்‌ துதிப்பிரபந்தங்கள்‌ 1. திருவைம்பாவை--202-99 2... பத்தும்‌ பதியம்‌--818 “பத்தியுடன்‌ சம்பந்தர்‌ பாடப்‌ பத்தும்‌ பதியம்‌ வெற்றி பெறப்‌ பெற்ற விழியிரண்டும்‌? (௮. உலா. 818) 45 ஷ்‌ மே 04 சே. மே 14 ௦ அருகர்‌ புகழ்‌ மாலை ஆதிநாதர்‌ பிள்ளாத்‌ தமிழ்‌ திருநூற்றந்தாதி தீபங்குடிப்‌ பத்து பெருந்தொகை--சென்னை யூனிவர்ஸிடி தமிழ்‌-லெக்ஸிகன்‌ ஆபீஸ்‌ தலைமைப்‌ பண்டிதர்‌ இராமநாதபுரம்‌ மு இராக வையங்கார்‌ தொகுத்தது. (1985. 96) அருகக்‌ கடவுள்‌--பக்‌. 82-48. பாடல்கள்‌ 1380 முதல்‌ 188 வரை 584 பாடல்கள்‌. (இவை யாப்பருங்கல்‌ விருத்தியுரை, காரிகையுரை முதலியவற்றினின்று திரட்டியவை . ) பண்டை நூல்களில்‌ அருகன்‌ புகழ்மாலை சிலப்பதிகாரம்‌ 6. யசோதர காவியம்‌ பெருங்கதை 7. நாக குமார காவியம்‌ சீவகசிந்தாமணி 8. உதயண குமார காவியம்‌ சூளாமணி 9. குண்டலகேசி நீலகேசி திருநறுங்கொண்டையைத்‌ தொழுது பேறு பெற்ருர்‌ அப்பர்‌, சம்பந்தர்‌ என்பார்‌ ௮அப்பாண்டை நாதரைப்பாடி ஞானம்‌ பெற்றனர்‌. இச்‌ செய்தியை, என்றும்‌, “அப்பர்சம்‌ பந்தர்க்கு அன்பாய்‌ விழிகொடுத்த அப்பன்‌ சினகிரிவா ழய்யன்‌? (௮ உலா. 58) 46 பக்தியுடன்‌ சம்பந்தர்‌ பாடப்‌ பத்தும்‌ பதியம்‌ வெற்றிபெறப்‌ பெற்ற விழியிரண்டும்‌ (௮. உலா, 818) என்றும்‌ வரும்‌ அப்பாண்டை நாதர்‌ உலாக்‌ கண்ணிகளால்‌ தெரியவரும்‌. இங்குக்‌ குறிக்கப்பெற்ற அப்பர்‌, சம்பந்தர்‌ என்னும்‌ பெயர்களைக்‌ கேட்ட அளவில்‌ இவர்‌ சைவசமய கேரவர்‌ நால்‌ வருள்‌ இருவராகிய அப்பர்‌ சம்பந்தரோ என்று எண்ணத்‌ தோன்றும்‌. இவர்கள்‌ சைவசமயத்தார்‌ போற்றும்‌ நாயன்மா ரல்லரீ$; ஜைன அறவோரேயாவர்‌. திருநறுங்கொண்டையில்‌ கோயில்‌ கொண்டுள்ள பகவான்‌ பாரீசுவ நாதரை அங்குள்ள கல்வெட்டுகள்‌ அப்பர்‌ என்‌ே குறிப்பிடுகின்றன, எனவ அந்‌ நாதரின்‌ பெயரைச்‌ சூட்டிக்கொண்ட ஓரு முனிவரையே உலா நூல்‌ குறிப்பிடுகிறது என்பது தெளிவு. இவ்வாடேற தோத்திரத்‌ திரட்டில்‌ மூன்று இடங்களில்‌ குறிக்கப்படும்‌ ஜைனமுனிவராகிய சம்பந்த முனிவரையே உலாப்பாடியவர்‌ போற்றியுள்ளார்‌ என்பதும்‌ தெளிவு. வரையறுத்தபாட்டியல்‌ இயற்றியருளிய சம்பந்த மாமுனிவரைப்பற்றிப்‌ புலவர்‌ உலகம்‌ நன்கு அறியும்‌. இவ்‌ விவரங்க&£ ஜீவபந்து டி. எஸ்‌, ஸ்ரீபால்‌ அவர்கள்‌ எழுதி யுள்ள “தமிழகத்தில்‌ ஜைனம்‌? என்னும்‌ கட்டுரையில்‌ நன்கு விளக்கியுள்ளார்‌. கமடன்‌ எறிந்த கற்குன்று “நீசக்‌ நமடன்‌ எறிந்தகற்‌ குன்றினும்‌ நின்ராய்‌! (திருமேற்‌. அந்‌. 17) ₹கமடன்‌ விட்ட சரத்திற்‌,..செல்வனையே? (திருமேற்‌. அந்‌. 88) ₹௮னுஷ நெனக்‌ கன்மழையா லக்கமடன்‌ பெய்ய சநுவிற்‌ செயிற்றனத்தைச்‌ சாத்தி:-- (௮. உலா. 188) 47 :கமடன்விடு கன்மழையுங்‌ காலின்‌ மலராய்‌ அமடன்‌ இறைஞ்ச அருளாய்‌” (௮. உலா, 828) அந்தகர்க்கு வீட்டுநநறி அருளல்‌ *மைந்தர்க்‌ கிரங்கி மகளிர்க்‌ கிணங்கி வழியறியா வந்தர்க்கும்‌ வீட்டுநெறி தருங்காண்‌:--- (திருமேற்‌. அநீ. (8) ௭ ஆர்ந்தவயன்‌ அன்றுரும மந்தற்‌ கருளினான்‌ வெற்பிட நின்று தவழ்ந்த பிறை நெற்றியாள்‌? (௮ உலா. 427. 426) அவுணன்‌ விடுசரந்‌ தடுத்தது - நின்ற தெப்பம்‌ ஏற்றவுணன்‌, விற்ரொடர்‌ பாயவன்‌ வெங்கணை மாறி விழவிழவே” (திருமேற்‌. அந்‌. 58) அஇகல்வா ளவுணன்‌ கதம்பார்த்‌ தரவர சன்பணத்‌ தாலிட்ட காவணத்தார்‌ சுதம்பார்த்‌ தவரருளிச்‌ செய்த மாற்றந்‌ துணிந்தவாடூற. (திருமேற்‌, அந்‌. 61) வானும்‌ புவியுந்‌ தொழுமணியே யுன்னை வாளவுணர்‌ கோனும்‌ படையும்‌ போர்‌ வந்த ணாளன்பு கூர்ந்துரகன்‌ ருனுந்‌ துணைவியுஞ்‌ செய்த நன்றிக்‌ கவர்‌ தம்மையல்லால்‌ யானுங்‌ கிளையுந்‌ துதியாற்‌ ரொழுந்தெய்வ மெத்தெய்வமே. (திருமேற்‌. அந்‌. 64) எ னன்றவுணன்‌ விட்ட இடியே றெனவந்‌ தெதிர்ந்‌ தெழு சீற்றத்‌ திடி தடுத்த கொடியே யெறிசிக ரத்திருப்‌ பாழிக்‌ குணக்குன்றமே, (திருமேற்‌. அந்‌, 74)